Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி
    மாநிலம்

    ‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்ற காவல் துறையினரின் எச்சரிக்கை பேனரால் பொது மக்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

    ஓசூரில் 152 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால், இப்பூங்காவுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பலரும் வந்து பூங்காவில் பொழுதை கழித்துச் செல்கின்றனர். இப்பூங்காவில் பகல் நேரங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதுடன் சிலர் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    இந்நிலையில், பூங்காவில் காதல் ஜோடிகள் வருகை அதிகரித்திருப்பதோடு, பூங்காவின் உள்ளே முகம் சுழிக்கும் அளவுக்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் செயல்களும், சிலர் மது அருந்தும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இரவு காவலாளி இல்லாததால், இரவில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பூங்காவை காலை மற்றும் மாலை நேரம் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் திறந்து வருகிறது.

    இதனிடையே, பூங்கா நுழைவாயில் பகுதியில் காவல் துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை’ என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காதலர்களை எச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்ற வாசகம் திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “ராமநாயக்கன் ஏரி பூங்காவில் காதலர்கள் அத்துமீறல் காரணமாக பூங்கா நுழைவாயிலில், காவல் துறை வைத்துள்ள பதாகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் காவலாளிகளைப் பணியமர்த்தி காதலர்களைக் கண்காணிக்க வும், அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதை விடுத்துப் பொத்தம் பொதுவாகப் பதாகை வைத்திருப்பது வேதனை அளிக்கிறது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள்…. கல்விதான் காரணமா?” – தமிழரசன் பச்சமுத்துவுக்கு சீமான் கேள்வி

    September 26, 2025
    மாநிலம்

    ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்

    September 26, 2025
    மாநிலம்

    மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 26, 2025
    மாநிலம்

    பேனர் வைத்ததற்காக தவெக மீது மட்டுமே வழக்கு: சி.டி.நிர்மல்குமார் ஆவேசம்

    September 26, 2025
    மாநிலம்

    “கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    September 26, 2025
    மாநிலம்

    “தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள்…. கல்விதான் காரணமா?” – தமிழரசன் பச்சமுத்துவுக்கு சீமான் கேள்வி
    • பூட்டான் டிராவல்: பூட்டான் 25,000 ரூபாய்: ஒரு கனவு பயணம் (பயணம் சேர்க்கப்பட்டுள்ளது) | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” – பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன் கருத்து
    • ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்
    • தினமும் பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்கவும்: படிப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.