Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்க விசா விவகாரம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்
    உலகம்

    அமெரிக்க விசா விவகாரம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க விசா விவகாரம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திறமையான இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.

    அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அந்நாட்டு அரசு திடீரென உயர்த்தியது. இந்திய மென்பொறியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் சேர்வதை தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என கருதப்படுகிறது. அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, திறமையான இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு ஈர்க்க ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனியும் பிரிட்டனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அகெர்மான், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் ஜெர்மனியில் உள்ளதாகக் கூறி, இந்தியர்கள் ஜெர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜெர்மனியில் இந்தியர்கள் பணிபுரிய அழைப்பு விடுப்பதற்கு இது சரியான தருணம்.

    ஜெர்மனியில் அதிக அளவில் பொருள் ஈட்டுபவர்களில் இந்தியர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள். ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மனியில் பணிபுரியும் ஜெர்மானியர்களைவிட அதிகம் பொருள் ஈட்டுகிறார்கள். உண்மையில் இது ஒரு நல்ல செய்தி. எங்கள் சமூகத்துக்கும் எங்கள் நாட்டுக்கும் இந்தியர்கள் அதிக பங்களிப்பை அளிப்பதாலேயே அவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். கடின உழைப்பின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சிறந்த வேலைகள் சிறந்த நபர்களுக்குச் செல்வதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

    ஜெர்மனியின் கார்களைப் போன்றது எங்கள் நாட்டின் இடப்பெயர்வு கொள்கை. அது நம்பகத்தன்மை வாய்ந்தது, நவீனமானது, எதிர்பார்க்கக்கூடியது. குறுக்கும் நெடுக்குமாக பயணப்படாமல் நீங்கள் நேர்கோட்டில் செல்ல முடியும். நாங்கள் எங்கள் அடிப்படைக் கொள்கைகளை ஒரே இரவில் மாற்றுவதில்லை. அதிக திறமையுள்ள இந்தியர்களை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம். ஜெர்மனிக்கு வர நீங்கள் முடிவெடுத்தால் உங்களுக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பிரிட்டனும் திறமையான இந்தியர்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “உயர் திறன் கொண்ட பணியாளர்கள் பிரிட்டனுக்கு வருவதற்கான வழிகளை அரசு எளிதாக்கும். அமெரிக்காவைப் போல முரண்பாடுகள் நிறைந்ததாக இல்லாமல், லண்டன் உலகளாவிய திறமைகளை வரவேற்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், திறமையான வெளிநாட்டினரை ஈர்க்கும் நோக்கில் சீனாவும் கே விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்த இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த விசா, நெகிழ்வுத்தன்மை கொண்டது என்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றும் எந்த ஒரு நிறுவனமும் அழைக்க வேண்டும் என இல்லாமல், விருப்பம் உள்ளவர்கள் அவர்களாகவே இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை

    September 25, 2025
    உலகம்

    யு.எஸ். ஃபெண்டானில் ஒடுக்குமுறை: போலி மாத்திரைகள் மீது அனுமதிக்கப்பட்ட இரண்டு இந்தியர்கள்; அமெரிக்கர்களுக்கு ஆன்லைனில் மருந்துகளை விற்றது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 25, 2025
    உலகம்

    48 மணிநேரம் கொடுமைப்படுத்துதல், கைவிலங்குகளில் ஜார்ஜியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது: சீக்கிய பாட்டி பிபி ஹர்ஜித் கவுர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்; குடும்பம், வழக்கறிஞருக்கு தகவல் இல்லை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 25, 2025
    உலகம்

    வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

    September 25, 2025
    உலகம்

    எலோன் மஸ்கின் ஆழ்ந்த ஒப்புதல் வாக்குமூலம்: ‘சில நேரங்களில் நான் மிகவும் முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்கிறேன், மக்கள் ஆழமானவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள், சில சமயங்களில்…’ | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 25, 2025
    உலகம்

    ரஷ்யாவை தவிர எங்கு வேண்டுமானாலும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்: அமெரிக்கா

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை
    • கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கோரி விசிக துண்டு பிரசுரம்
    • இந்தியர்களுக்கு ஏன் புற்றுநோய் கிடைக்கிறது: சிறந்த புற்றுநோயியல் நிபுணர் 5 தவிர்க்கக்கூடிய காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்
    • கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த அதிர்ச்சியும் பின்னணியும்
    • கல்பாக்கம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தூய்மை பணிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.