Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்
    மாநிலம்

    பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்க மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சரும், பாஜக தேசிய தலை​வரு​மான ஜெ.பி.நட்டா அக்​.6-ம் தேதி சென்னை வரவுள்​ள​தாக அக்​கட்​சி​யின் தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

    நடிகை ராதி​கா​வின் தாய் கீதா ராதா மறைவையொட்​டி, போயஸ் கார்​டனில் உள்ள அவரது வீட்​டுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​று, ராதி​கா, சரத்​கு​மார் மற்​றும் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார்.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அனைத்து மாநிலத்​தைச் சேர்ந்த நிதி அமைச்​சர்​களும் ஜிஎஸ்டி கவுன்​சிலில் உறுப்​பினர்​களாக இருக்​கிறார்​கள். இவர்​களின் ஒப்​புதலோடு​தான் இந்​தி​யா​வில் ஜிஎஸ்டி கொண்டு வரப்​பட்​டது. தற்​போது, 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி வரி 5, 18 என 2 அடுக்​கு​களாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

    வரிவி​கிதம் குறைக்​கப்​பட்​ட​தால் மக்​கள் நன்மை தான் அடைந்​திருக்​கிறார்​கள். ஜிஎஸ்​டி-​யில் 50 சதவீதம் பங்கு மாநிலங்​களுக்கு மத்​திய அரசு வழங்க வேண்​டும். அதை நான் மறுக்​க​வில்​லை. ஆனால், அந்த தொகையை தான், மாநிலங்​களின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு செல​விடு​கிறது என்​பதை புரிந்து கொள்ள வேண்​டும்.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்​பில் அனைத்​தி​லும் விலை குறைக்​கப்​பட்​டது. ஆனால், தமிழக அரசால் ஆவினில் விலையை குறைக்க முடிய​வில்​லை. மத்​திய அரசு மக்​களுக்கு விரோத​மான திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​வ​தாக முதல்​வர் ஸ்டா​லின் கூறு​வது தவறு. ரேஷன் கடைகளில் மத்​திய அரசு இலவச​மாக பொருட்​களை கொடுக்​கிறது.

    இது மக்​கள் விரோத​மா, விவ​சா​யிகளுக்கு ஆண்​டுக்கு ரூ.6 ஆயிரம் மத்​திய அரசு வழங்​கு​கிறது. இது மக்​கள் விரோத திட்​ட​மா, மத்​திய அரசு 37 லட்​சம் விவ​சா​யிகளுக்கு இந்த தொகையை வழங்கி வந்​தது. இதனால், மத்​திய அரசுக்கு நற்​பெயர் கிடைத்​து​விடும் என்ற எண்​ணத்​தில் மாநில அரசு, பல விவ​சா​யிகளின் பெயர்​களை நீக்​கி, 19 லட்​ச​மாக குறைத்​துள்​ளது. இது​விவ​சா​யிகளுக்கு தமிழக அரசு செய்​யக்​கூடிய மிகப்​பெரிய துரோகம்.

    சென்னை ராயப்​பேட்​டை​யில் அதி​முக தலைமை அலு​வல​கம் இருப்​பது கூட கனி​மொழிக்கு தெரி​யவில்லை என்பது, அவரது நிலையை நினைத்து எனக்கு பாவ​மாக இருக்​கிறது. பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா வரும் 6-ம் தேதி மதுரவாயல் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​கிறார்.

    அதன்​பிறகு, அங்​கிருந்து புதுச்​சேரி செல்​கிறார். பின்​னர், புதுச்​சேரி​யில் இருந்து டெல்லி செல்​கிறார். இவ்​வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘பாஜக​வின் தேர்​தல் பரப்​புரையை வரும் அக்​.12-ம் தேதி மதுரை​யில் தொடங்​கு​கிறோம். இந்த தேர்​தல் பரப்​புரை​யில்​ முக்​கிய பிர​முகர்​கள்​ கலந்​து கொள்​வார்​கள்​’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கோரி விசிக துண்டு பிரசுரம்

    September 25, 2025
    மாநிலம்

    கல்பாக்கம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தூய்மை பணிகள்

    September 25, 2025
    மாநிலம்

    வள்ளி கும்மி கலைஞர் பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்க விசிக எதிர்ப்பு

    September 25, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம்

    September 25, 2025
    மாநிலம்

    கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    September 25, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: கல்லூரி பேருந்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக போராட்டம்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்பக புற்றுநோய்: ஒரு மேமோகிராம் ஒருபோதும் தவறவிடாதீர்கள்: ஸ்கிரீனிங்கைத் தவிர்ப்பது மார்பக புற்றுநோய் இறப்பு அபாயத்தை உயர்த்தக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘The Ba***ds of Bollywood’ சீரிஸுக்கு எதிர்ப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு
    • ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை
    • கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கோரி விசிக துண்டு பிரசுரம்
    • இந்தியர்களுக்கு ஏன் புற்றுநோய் கிடைக்கிறது: சிறந்த புற்றுநோயியல் நிபுணர் 5 தவிர்க்கக்கூடிய காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.