Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!
    மாநிலம்

    ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.பாலு, “பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, பாமக சட்டப்பேரவை குழு கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாமக அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில், பாமக சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தெரிவிக்கப்பட்டு, அதற்கு தலைமைக்குழு ஒப்புதல் வழங்கியது. அதன் கடிதத்தை இன்று சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கினோம்.

    மேலும், கடந்த ஜூலை 3 அன்று பாமகவின் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை கொறடா பொறுப்பிலிருந்து நீக்கி, சிவக்குமாரை கொறடாவாக நியமிக்கும் கடித்ததை கொடுத்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாகவும் இன்று ஒரு கடிதத்தை கொடுத்துள்ளோம்.

    பாமக பொதுக்குழுவில், தலைவர் அன்புமணி உள்ளிட்டோரின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 2026 வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது. அதன் நகலையும் சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்துள்ளோம். மாம்பழம் சின்னமும், அதேபோல தேர்தலில் வேட்பாளருக்கு சின்னத்துக்காக கையொப்பம் இடும் அதிகாரமும் அன்புமணிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. பாமகவில் உள்ள அனைவரும் அன்புமணி தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.

    தற்போதைய கடிதத்தின் படி, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக சட்டப்பேரவை குழு தலைவர் வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். ஜி.கே.மணி பாமகவில் 25 ஆண்டுகளாக தலைவராக இருந்தவர், அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டவர். கட்சிக்காக நிறைய உழைத்தவர். அவர் சமீபத்தில் கட்சிக்கு எதிராக சொல்லும் கருத்துகள் வருத்தமளிக்கிறது. எனவே அவரை சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பிலிருந்து மட்டும் விடுவித்துள்ளோம், கட்சியிலிருந்து நீக்கவில்லை” என்றார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொத்தமல்லி உடல் எடையை குறைக்க உதவுகிறது: நன்மைகள் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும்’: 120 மில்லியன் யூரோ பெனால்டியுடன் பிரஸ்ஸல்ஸ் Xஐத் தாக்கிய பிறகு எலோன் மஸ்க் வெடித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மஜூலி நதி தீவு: இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நதி தீவு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இதய ஆரோக்கியம்: ஆரோக்கியமான இதயத்திற்கு சிறந்த உட்காரும் தோரணை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரன்பீர் கபூர் தனது பாட்டி செய்யும் உணவைப் பற்றிய தனது முதல் நினைவைப் பகிர்ந்து கொண்டார்.

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.