Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்
    மாநிலம்

    புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்​கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்​சி, குடிநீர் வாரிய பணி​களுக்கான சாலை தோண்​டும் பணி​களை மின்​வாரி​யம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம் விநி​யோகிக்க உயர​மான கம்​பங்​களில் மின் கம்​பிகள் பொருத்​தி​யும், நிலத்​துக்கு அடி​யில் மின் கம்​பிகளை புதைவடங்​களாக பொருத்​தி​யும் மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

    இதில், கிராமப்​புற, புறநகர் பகு​தி​களில் உயரமான கம்​பங்​களில் மின் கம்​பிகள் வாயி​லாக மின்​சா​ரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகு​தி​களில் அதி​கப்​படி​யான நெரிசல், உயர்ந்த கட்​டிடங்​கள் உள்​ள​தால், பாது​காப்பை கருத்​தில் கொண்​டு, அங்கே மின் கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டு, புதைவட மின் கம்​பிகள் பொருத்​தப்​பட்​டன.

    குறிப்​பாக, சென்னை மாநகர் முழு​வதும், புறநகர் பகு​தி​களில் பெரும்​பாலான இடங்​களில் புதை மின்​வடங்​கள் மூலம் மின்​விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மாநகராட்​சி, குடிநீர் வாரி​யம் பணி​களுக்கு சாலை தோண்​டும் போது, பல இடங்​களில் புதை மின்​வடங்​கள் சேதப்​படுத்​தப்​படு​கின்​றன.

    சேத​மாகும் மின்​வடங்​கள் சரி செய்​யப்​ப​டா​மல் அப்​படியே விட்டு செல்​லப்​படு​வ​தால், மழைக் காலங்​களில் மின் விபத்​துகள் ஏற்படு​கின்​றன. கடந்த சில நாட்​களுக்கு முன்பு கண்​ணகி நகரில் பெண் தூய்​மைப் பணி​யாளர் மின்​சா​ரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    இதை தொடர்ந்​து, சென்னை மாநகர், புறநகர் பகு​தி​களில் சேதமடைந்த புதைமின் வடங்​களை கணக்​கெடுக்க சிறப்​புக் குழுக்கள் அமைக்​கப்​பட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. மேலும், எதிர்​காலத்​தில் இது போன்ற விபத்​துகளை தடுக்க சாலைகளில் பள்​ளம் தோண்​டும் பணி​களை மின் வாரிய பணி​யாளர்​கள் மூலம் மேற்​கொள்​ள​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

    இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் மின் விபத்து தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, சென்​னை​யில் மின் விபத்தை ஏற்​படுத்​தும் வகையி​லான புதைமின் வடங்​கள் மற்​றும் மின்​விபத்து பகு​தி​களைக் கண்​டறிய தனி குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. கடந்த 2 வாரங்​களுக்கு மேலாக இந்​தக் குழுக்​கள் நடத்​திய ஆய்​வில், 700 புதைமின் வட சேதங்​கள் உட்பட பழுதடைந்த மற்​றும் தாழ்​வான பகு​தி​களில் உள்ள மின் பெட்​டிகள் என, 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மின்​விபத்​துகள் ஏற்​படும் பகு​தி​கள் கண்​டறியப்​பட்​டன.

    இதில், புதை மின்வட சேதங்​கள் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்ட மின் உபகரண சேதங்​கள் சரி செய்​யப்​பட்​டுள்​ளன. இன்​னும் ஒரு வாரத்​துக்​குள் மீத​முள்ள சேதங்​களும் சரிசெய்​யப்​பட்டு மின் விபத்து உயி​ரிழப்​பு​கள் முற்​றி​லும் தடுக்​கப்​படும். மேலும், தற்​போது மாநக​ராட்​சி, குடிநீர் வாரி​யம், உள்​ளாட்சி அமைப்​பு​கள் சாலை தோண்​டும் பணி​களுக்கு முன் மின் வாரி​யத்​திடம் தகவல் தெரிவிக்க வேண்​டும் என்ற நிலை உள்​ளது. இருப்​பினும், பணி​களின் போது புதைமின் வடங்​கள் சேதப்​படு​கின்​றன.

    இனி வரும் நாட்​களில் சாலை தோண்​டும் பணி​யை​யும் மின் வாரிய பணி​யாளர்​கள் மூலம் மேற்​கொள்​ள​வும், அந்த சாலை தோண்​டும் பணிக்​கான செலவை உள்​ளாட்சி அமைப்​பு​களிடம் இருந்து மின் வாரி​யம் பெறவும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மற்ற துறை சார்ந்த அதி​காரி​களிடம் ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி: கல்லூரி பேருந்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக போராட்டம்

    September 25, 2025
    மாநிலம்

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெ.பி. நட்டா

    September 25, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    September 25, 2025
    மாநிலம்

    பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்

    September 25, 2025
    மாநிலம்

    பக்கத்து மாவட்டத்தில் ‘பவர்’ காட்டுவது இருக்கட்டும்… சொந்த மாவட்டம் சொத்தை ஆகிடாம பாருங்க விஜயபாஸ்கர்!

    September 25, 2025
    மாநிலம்

    ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மனச்சோர்வு மற்றும் ஹைபோகாண்ட்ரியா’ என 20 ஆண்டுகள் தவறான நோயறிதல் அதிர்ச்சியூட்டும் நோயுடன் முடிவடைகிறது: ஃப்ரெடெரிக் ரோஸ்காப்பின் நாள்பட்ட லைம் நோய் ஆரம்ப அறிகுறிகள் கவனிக்கப்படவில்லை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ராகுல் காந்தி நேபாளத்திலேயே தங்கிக் கொள்ளலாம்’ – வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பட்னாவிஸ் பதில்
    • தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு: மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
    • ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு
    • ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் செப்.30-ல் தீர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.