Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது இந்திய மூதாட்டி சாதனை
    தேசியம்

    துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது இந்திய மூதாட்டி சாதனை

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது இந்திய மூதாட்டி சாதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டத்​தில் உள்ள கொன்​னத்​தடியைச் சேர்ந்​தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மை​யில் துபாய்க்கு சென்​றிருந்த அவர் 13,000 அடி உயரத்​திலிருந்து ஸ்கைடை​விங் செய்​தார். இந்​தி​யா​விலிருந்து 70 வயது மூதாட்டி ஒரு​வர் இவ்​வளவு உயரத்​திலிருந்து குதித்து சாதனை படைத்​தது இதுவே முதல்​முறை என்று கூறப்​படு​கிறது.

    இதுகுறித்து கல்ப் நியூஸுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறிய​தாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்​தேன். அப்​போது அவனிடம் ஸ்கைடை​விங் குறித்த ஆசையை வெளிப்​படுத்​தினேன். எனது நண்​பர்​களும் இந்த வயதில் இது முடி​யாத காரி​யம் என்று எனது கனவுக்கு தடை போட்​டனர்.

    இருப்​பினும், எனது மகன் நான் அந்த விஷ​யத்​தில் தீவிர​மாக இருப்​பதை உணர்ந்து அதற்​கான ஏற்​பாடு​களை செய்​தான். துபா​யில் உள்ள ஸ்கைடை​விங் குழுவை அணுகி 13,000 அடி உயரத்​தில் இருந்து குதிப்​ப​தற்கு ஏற்​பாடு செய்​தான். அந்த நாளை மட்​டும் என்​னால் மறக்க முடி​யாது.

    மேலிருந்து பார்க்​கும்​போது துபாய் நிலப்​பரப்பு முழு​வதும் தெரிந்​தது. கடலைப் பார்க்​கும்​போது ஏதாவது அசம்​பா​விதம் நிகழ்ந்​தால் கடலில் குதித்து தப்​பி​விடலாம் என்று நினைத்​தேன். ஏனெனில் எனக்கு நன்​றாக நீச்​சல் தெரி​யும். அது ஒரு அழகான தருணம். நம்​ப​முடி​யாத அனுபவம்.

    13,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த சாதனைக்கு எனது கணவர் வழங்​கிய ஊக்​கம் தான் மிக முக்​கி​ய காரணம் புதிய விஷ​யங்​களை ஆரா​யும் எனது ஆர்​வத்தை அவர் எப்​போதும் ஆதரிப்​பார். தடை போட மாட்​டார். இது எனது முதல் சாகசம் கிடை​யாது. நான் ஏற்​கெனவே வயநாட்​டில் ஸிப்​லைனிலும், புஜை​ரா​வில் பாராகிளைடிங்​கிலும் பறந்து சாகசம் செய்​துள்​ளேன்.

    எனக்கு இரண்டு மகன்​கள். இரண்டு பேரன்​கள். எனது வாழ்க்​கையை போதும் என்ற அளவுக்கு வாழ்ந்​து​விட்​டேன். இனி இருக்​கும் காலம் எல்​லாம் போனஸ்​தான். என் வாழ்​நாள் முழு​வதும் அனுபவிக்க வேண்​டிய நேரம் இது. பயப்​படு​வதற்கு ஒன்​றும் இல்​லை. விண்​வெளிக்​கு செல்​ல​வும் நான் தயா​ராக உள்​ளேன். ஏன் கூடாது?. கனவு காண்​ப​தற்​கு வயது தடை இல்​லை. இவ்​வாறு லீலா ஜோஸ்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு

    September 25, 2025
    தேசியம்

    ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் புறப்பட்ட புதிய சர்ச்சை!

    September 25, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

    September 25, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் 71 நக்சலைட்கள் போலீஸில் சரணடைந்தனர்

    September 25, 2025
    தேசியம்

    இந்து மக்கள் தொகை: ஆதித்யநாத் கருத்து

    September 25, 2025
    தேசியம்

    காஷ்மீர், பஞ்சாபில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
    • மிலிண்ட் சோமன் காலை உணவுக்கு தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார், அவர் ஏன் 60 வயதில் இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை இப்போது நாங்கள் அறிவோம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு
    • சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்
    • தேங்காய் மலாய் சாப்பிடுவது ஏன் ஆற்றல், இதயம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.