திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. பிற்பகலில் திருமஞ்சனம் கண்டருளிய ரங்கநாயகி தாயார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த தாயார், இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
28-ம் தேதி வரை தினமும் கொலு மண்டபத்தில் தாயார் வீற்றிருப்பார். முக்கிய நிகழ்வாக தாயார் திருவடி சேவை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்த சேவை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். அக். 1-ம் தேதி மாலை திருமஞ்சனம், அன்று இரவு படிப்பு கண்டருளுதல் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.