Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? – வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை
    தேசியம்

    வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? – வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? – வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன. எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓய்வு பெற்றதை ஊடகமும், அரசியல் முணுமுணுப்புகளும் சுட்டிக்காட்டின. மோடி ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இவை அனைத்தும் நல்ல கேள்விகள். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் தகுந்த பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டன. உண்மைகளுக்கு மாற்றாக அவற்றுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. தற்போது பிறந்தநாள் முடிவடைந்துள்ள வேளையில், ஒரு விரிவான பகுப்பாய்வு அவசியமாகிறது.

    இந்தியாவில், கூறப்படும் வயது வரம்புக்கு மேல் பல பிரதமர்கள் திறம்பட பணியாற்றி இருக்கிறார்கள். 1991 நிதி சீர்திருத்தங்களின் வாயிலாக நாட்டை வழிநடத்திச் சென்ற போது பி.வி.நரசிம்ம ராவுக்கு வயது 70-ஐ கடந்திருந்தது. மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தனது 81-வது வயது வரை ஆட்சியில் இருந்தார். இன்றும் கூட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் போன்றவர்கள் தங்களது எண்பது வயதுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

    பாஜகவின் வரலாறும் இதையே பிரதிபலிக்கிறது. கடந்த 2004-ல் அடல் பிகாரி வாஜ்பாய் தமது 79-வது வயதில் மறு தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்து 84 வயது வரை நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். அத்வானி தனது எண்பதுகள் வரை கட்சியை வழிநடத்திச் சென்றார், இறுதியில் தனது நாடாளுமன்ற செயல்பாட்டை 91 வயதில் முடித்துக் கொண்டார். முரளி மனோகர் ஜோஷி, 85 வயதில் தனது பதவிக் காலம் முடியும் வரை, கல்வி மற்றும் எரிசக்தி குறித்த விவாதங்களை வடிவமைத்து, செல்வாக்கு மிக்க நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தலைமை தாங்கினார்.

    2024 தேர்தல் பிரச்சாரத்தின் மூன்று மாத காலத்தில், 200-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் ​​மோடி உரையாற்றினார். பெரும்பாலான நாட்கள், கோடை வெயிலின் உச்சத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் உரையாற்றிய பின், அரசு சார்ந்த பணிகளுக்காக அவர் டெல்லிக்குத் திரும்புவார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் அந்தப் பணியை மேற்கொள்ள தயாராக இருந்தார், இன்னமும் இருக்கிறார்.

    அரசியலில் நீண்ட ஆயுள் என்பது வெறும் உடல் உறுதி சார்ந்தது அல்ல. தனது தலைமுறையின் மிகவும் திறமையான மற்றும் அறிவார்ந்த அரசியல் வாதியாக மோடி விளங்குகிறார். அவரது புகழுக்கு முக்கிய காரணம் அவரது போற்றத்தக்க மற்றும் தொடர்ச்

    சியான பரிணாம வளர்ச்சியாகும். ஆனால், வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை.

    நிதிநுட்பம் முதல் குறைக்கடத்திகள் வரை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் முதல் வர்த்தக ஒப்பந்தங்களில் லட்சியம் வரை, அவர் வயதில் இளையவர் அல்ல, ஆனால் நிச்சயமாக சிந்தனையில் இளைஞர். அதனால்தான் இந்தியர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வயதின் அடிப்படையில் மட்டுமே அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதும், மோடியின் நீடித்த ஈர்ப்பை அளவிடுவதும், நியாயமற்றது, யதார்த்தமில்லாதது.

    – அசோக் மாலிக், ஆசிய குழுமத்தின் இந்திய பங்குதாரர்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது இந்திய மூதாட்டி சாதனை

    September 25, 2025
    தேசியம்

    தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்: கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம்

    September 25, 2025
    தேசியம்

    ஐ.நா. சபையின் ஏஐ சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை பரிந்துரைத்தது இந்தியா

    September 25, 2025
    தேசியம்

    நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு: இமாச்சல பிரதேசத்தில் மேடையிலேயே உயிர்நீத்த நாடக நடிகர்

    September 25, 2025
    தேசியம்

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    September 25, 2025
    தேசியம்

    மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காக காங். 10 வாக்குறுதிகள் – பிஹாரில் ராகுல் காந்தி வெளியீடு

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
    • மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
    • 70 மற்றும் 72 வயதுடைய அவரது பெற்றோர் எடையை இழந்து, தங்கள் ஆற்றலை மீண்டும் பெற்றனர், ‘தங்கள் உணவை அதிகரிக்க மாற்றினார்கள் ….’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
    • ‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.