Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“நடிகர் பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?” – சீமான் காட்டம்
    சினிமா

    “நடிகர் பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?” – சீமான் காட்டம்

    adminBy adminSeptember 24, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “நடிகர் பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?” – சீமான் காட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு” என்று நடிகர் பாலாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்கு உரியது.

    வறுமையில் வாடும் மக்களுக்கு பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப் போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும். மாறாக, உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச் செயலாகும்.

    பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை, எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது? அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.

    எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது? இந்த நாட்டில் உளவுத் துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமான வரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை உள்ளது. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது ? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார் என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்?

    இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்? பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும் தான். உங்களுக்கு என்ன வேலை அதில்? ஏனென்றால், இப்போது பாலாவை பற்றிப் பேசினால் தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள் தான் பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

    மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்? பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்.

    இப்பொழுது பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன? இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில் தான் நாம் வாழ்கின்றோமா என்ற நடுக்கம் வருகின்றது. யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன என்ற கேள்விக்கு பதில் தருவார்களா?

    பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணை நிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!’ என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்று கொண்டே இரு. மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத் தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். அதனால் தான் உன்னை விரும்புகிறார்கள்” என்று சீமான் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாழ்க்கையின் இன்றியமையாத 8: தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் எவ்வாறு இதய நோய் மற்றும் பக்கவாதத்தை முன்னறிவித்து தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவகத்தை கூர்மையாக்கும் 10 மூளை பயிற்சிகள்
    • இந்த எளிய குஜராத்தி காலை உணவு வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை இயற்கையாக சரி செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போலியான மணீஷ் மல்ஹோத்ரா லெஹங்காவை வாங்கி ஏமாற்றும் முன் அதை அடையாளம் காண 5 வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறுநீர் கழிப்பதற்கான உங்கள் தொடர்ச்சியான தூண்டுதல் உண்மையில் ஒரு மறைக்கப்பட்ட குடல் பிரச்சனையாக இருக்கலாம் என்பதை சிறுநீரக மருத்துவர் வெளிப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.