Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு
    மாநிலம்

    வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார்.

    ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருந்​தால் அதை பிரித்து வாக்​குச்​சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன் அடிப்​படை​யில் சென்னை மாவட்​டத்​தில் தேர்​தல் வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், ரிப்​பன் கட்​டிட அலு​வல​கக் கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

    இந்த கூட்​டத்​தில் ஒரு கட்​சிக்கு 2 பிர​தி​நி​தி​கள் மட்​டுமே கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​டனர். அந்த வகை​யில் அங்கீகரிக்கப்பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களாக திமுக சார்​பில் சட்​டத்​துறை துணை செய​லா​ளர் சந்​துரு, அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்சர் ஜெயக்​கு​மார், பால​கங்​கா, பாஜக சார்​பில் மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன், கவுன்​சிலர் உமா ஆனந்த், காங்கிரஸ் கட்சி சார்​பில் சூரிய பிர​காசம், நவாஷ், இந்​திய கம்​யூனிஸ்ட் சார்​பில் மாவட்ட நிர்​வாக குழு உறுப்​பினர் உசேன், மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் மாவட்ட செயற்​குழு உறுப்​பினர்​கள் எஸ்​.கே.​முரு​கேஷ், எஸ்​.கு​மார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாவட்ட தேர்​தல் அலு​வலரும், மாநக​ராட்சி ஆணை​யரு​மான ஜெ.குமரகுருபரன் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு தலைமை வகித்​து, கட்சி பிர​தி​நி​தி​களுக்கு சென்​னை​யில் மறுசீரமைக்​கப்​பட்ட புதிய வாக்​குச்​சாவடிகளின் விவரங்​கள் குறித்து விளக்​கமளித்​தார்.

    அதன்​படி சென்​னை​யில் உள்ள 3,718 வாக்​குச்​சாவடிகளில் 1,200-க்​கும் அதி​க​மான வாக்​காளர்​களைக் கொண்டு வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைக்​கப்​பட்​டு, புதி​தாக 353 வாக்​குச்​சாவடிகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதாக​வும், சென்​னை​யில் தற்​போது வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கை, 4,071 ஆக உயர்ந்​திருப்​ப​தாக​வும் தெரி​வித்​தார்.

    இதையொட்டி கட்​டிட மாற்​றம், பெயர் மாற்​றம், வாக்​குச்​சாவடிகள் இணைப்பு மற்​றும் வாக்​குச்​சாவடிகள் பிரிப்பு உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார். இக்​கூட்​டத்​தில் கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் ம.பிர​தி​வி​ராஜ், மாவட்ட வரு​வாய் அலு​வலர் ஜி.சர​வண​மூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

    கூட்​டத்​தில், 2025 ஜனவரி மாதம் வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியல்​படி சென்​னை​யில் மொத்​தம் 40.15 லட்​சம் வாக்​காளர்​கள் இருப்​ப​தாக​வும், அதில் 19.70 லட்​சம் ஆண்​களும், 20.44 லட்​சம் பெண்​களும், 1,276 இதர வாக்​காளர்​களும் இருப்​ப​தாக கூறப்​பட்​டது. மேலும் 10,736 மாற்​றுத் திற​னாளி வாக்​காளர்​களும், 85 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் 81,047 வாக்​காளர்​களும், 564 வாக்​காளர்​கள் ராணுவத்​தில் பணி​யாற்றி வரு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக: அன்புமணி

    September 24, 2025
    மாநிலம்

    ‘வந்தவங்க வாழ்றாங்க… இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ – அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

    September 24, 2025
    மாநிலம்

    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

    September 24, 2025
    மாநிலம்

    டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்
    • கொழுப்பை உயர்த்தும் சீஸ்: சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு எந்த வகைகள் உள்ளன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆஷஸ் தொடர்: துணை கேப்டன் ஆனார் ஹாரி புரூக்; வோக்ஸ் இல்லை – இங்கிலாந்து அணி அறிவிப்பு
    • “அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா, ஆனால்…” – வரி விதிப்பு பற்றி மார்கோ ரூபியோ
    • ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக: அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.