Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: உதயநிதி உறுதி
    மாநிலம்

    மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: உதயநிதி உறுதி

    adminBy adminSeptember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: உதயநிதி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 837 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரூ.124 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் ரூ.25.89 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியவது: “விருதுநகரில் சுமார் ரூ.162 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை உதவிகளை வழங்குவதில் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அரசினுடைய வெற்றி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தில் தெரிகின்றது. எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்று எத்தனையோ பேருக்கு பட்டா கொடுத்தாலும் இன்னைக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து விருதுநகர் மக்களுக்கு பட்டா கொடுப்பது கூடுதல் சிறப்பு.

    நம்முடைய அரசு அமைந்த பிறகு சுமார் 19 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மட்டும் உள்ளவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது, இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி திட்டம். கட்டணமில்லா பேருந்துகளில் மகளிர் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளீர்கள். இந்த செப்டம்பர் வரைக்கும் 1 கோடியே 20 லட்சம் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாயை நம்முடைய முதல்வர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு மகளிருக்கும் கிட்டத்தட்ட ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    முதல்வர் உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறார். அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026-லும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த அரசு எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். நீங்க முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

    September 23, 2025
    மாநிலம்

    ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு!

    September 23, 2025
    மாநிலம்

    அண்ணாமலை அடுத்த இன்னிங்ஸ்… நயினார் நாகேந்திரனை ஓவர்டேக் செய்ய ‘ஸ்கெட்ச்’?

    September 23, 2025
    மாநிலம்

    விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து

    September 23, 2025
    மாநிலம்

    “திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    September 23, 2025
    மாநிலம்

    நாமக்கல்லில் கோழிப் பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்” – சாந்தனு ஓபன் டாக்!
    • கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு
    • ஒரு புலி காட்டில் வெற்றுப் பார்வையில் மறைக்கப்பட்டுள்ளது: சிறந்த கண்காணிப்பு திறன் உள்ளவர்கள் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி” – ஐ.நா சபை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சு
    • ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.