Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 450 பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து சட்ட விதிகள் மற்றும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை.

    ஒரு பட்டாசு ஆலைக்கும் இன்னொரு பட்டாசு ஆலைக்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பின்பற்றாமல் விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு பெரியளவில் ஏற்படும் வகையில் அருகருகே பட்டாசு ஆலைகள் அமைக்கின்றனர். இதனால் பட்டாசு ஆலைகளின் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டிலிருந்து 2025 ஆகஸ்ட் மாதம் வரை 77 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 77 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 2000-ம் ஆண்டிலிருந்து 331 பட்டாசு ஆலை விபத்துக்களில் 268 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்காகவும் தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கவும், பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பது மற்றும் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பட்டாசு ஆலைகளை முறைப்படுத்துதல் தொடர்பான மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்டு விசாரணையை செப்.23-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீங்கள் நினைப்பதை விட உங்கள் மலம் மிகவும் மதிப்பு வாய்ந்தது: மல தானம் செய்பவர்களுக்கு ஏன் தேவை உள்ளது மற்றும் அது எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி பெண்ணின் ‘கிக் டிரம்ப்’ என்று கூறிய வீடியோ வைரலானதை அடுத்து விவேக் ராமசாமி தொழில்நுட்ப மாநாட்டில் இருந்து விலகினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஸ்விகார் ஹை!” மணமகனின் வேடிக்கையான 8வது வாசனுக்கு மணமகள் ‘ஆம்’ என்கிறார், இணையத்தால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பல உயிர்களை சேதப்படுத்தியது’: பெண்கள் மற்றும் குழந்தைகளை ரகசியமாக படம்பிடித்ததற்காக இந்திய வம்சாவளி மருத்துவர் ஓமெய்ர் ஏஜாஸ் மிச்சிகனில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்; மனைவி முதல் புகார் கொடுத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த குளிர்காலத்தில் கோவிட் -19 வழக்குகளை கட்டுப்படுத்த இங்கிலாந்து சுகாதார நிறுவனம் ஆலோசனைகளை வெளியிடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.