Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அகமதாபாத் விமான விபத்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அகமதாபாத் விமான விபத்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இண்டியா விமான விபத்து தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர். இவர்களில், 169 பேர் இந்தியர்கள், 52 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசியர்கள், ஒருவர் கனடா நாட்டவர். இவர்களோடு, 12 விமானப் பணியாளர்களும் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது, மருத்துவ விடுதி பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் இந்தியரான விஸ்வேஷ்குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

    இந்நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் கோரி முன்னாள் விமானி அமித் சிங் தலைமையிலான ‘சேஃப்டி மேட்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரணையின் ஆரம்பக் கட்டங்களில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தரவுகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதி 2017-ஐ, விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை மீறியுள்ளது என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, “அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் துண்டு துண்டான தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. இது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை. விசாரணை முடியும்வரை முழுமையான ரகசியத்தை பேணுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற துயரங்கள், பெரும்பாலும் போட்டி விமான நிறுவனங்களால் பணமாக்கப்படுகின்றன.” என தெரிவித்துள்ளது.

    மேலும், நியாயமான, சார்பற்ற, விரைவான நிபுணர் குழு விசாரணை தொடர்பாக மத்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லி கலவர வழக்கில் ஜாமீன் கோரி உமர் காலித் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு

    September 22, 2025
    தேசியம்

    போலீஸ் ஆவணங்கள், பொது இடங்களில் சாதியை குறிப்பிட தடை: உ.பி. அரசு நடவடிக்கை

    September 22, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

    September 22, 2025
    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு – தகவல்

    September 22, 2025
    தேசியம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ பார்ட் – 2 நடக்குமா? – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

    September 22, 2025
    தேசியம்

    2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே முதல்வர் நரேந்திர மோடி: ஜெயராம் ரமேஷ்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செப்.25-ல் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வு – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு
    • மெக்னீசியத்தின் 7 பணக்கார சைவ ஆதாரங்கள் மற்றும் அவற்றை உட்கொள்ள சரியான வழி
    • பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • 30 வயதிற்குட்பட்ட ஆண்களில் புரோஸ்டேட் புற்றுநோய்: பார்க்க ஆரம்ப அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் தடுப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஈஷாவின் கிராமோத்சவ முன்னெடுப்பு: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.