Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா – IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்
    விளையாட்டு

    வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா – IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா – IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் அபார தொடக்கம் கொடுத்தனர். அதிலும் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் அதிரடி அற்புத ரகம்.

    துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்ஹான் 58, சயிம் அயூப் 21, முகமது நவாஸ் 21, பஹீம் அஷ்ரப் 8 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் பந்து வீசிய துபே 2 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் மற்றும் குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நவாஸ் ரன் அவுட் ஆனார். பும்ரா, 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை கொடுத்தார். இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது 4 கேட்ச்களை நழுவ விட்டது.

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அபிஷேக் அதிரடி: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போதும் அபிஷேக் சர்மா தனது அதிரடி பாணி ஆட்டத்தை தொடர்ந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 189.74. சஞ்சு சாம்சன், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 30, ஹர்திக் 7 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

    இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

    வம்புக்கு வந்த பாகிஸ்தான் பவுலர்கள்: இந்திய அணியின் ஓப்பனர்கள் அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் சிறந்த தொடக்கம் கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டனர். அதன் வெளிப்பாடாக அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஹரிஸ் ரவூப் மற்றும் ஷாஹின் ஷா அப்ரிடி ஆகியோர் அபிஷேக் மற்றும் ஷுப்மன் உடன் பஞ்சாபி மொழியில் பேசி வம்பிழுத்தனர். ஆட்டத்துக்கு நடுவே நடுவர் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டார்.

    அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் இணைந்து அதிகம் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆட்டம் தான் பேசும்; பேச்சல்ல’ என கில்லும், ‘நீங்கள் பேசுங்கள்; நாங்கள் வெல்கிறோம்’ என அபிஷேக்கும் ஆட்டத்துக்கு பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK

    September 22, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டி20 சேசிங்கில் 8-0: சுவாரஸ்ய தகவல்

    September 22, 2025
    விளையாட்டு

    ஃபகர் ஜமானுக்கு தவறான அவுட், தரையில் பட்டு கேட்ச் – பாக். கேப்டன் வேதனை

    September 22, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க சூர்யகுமார் மீண்டும் மறுப்பு

    September 22, 2025
    விளையாட்டு

    சீனா பாட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு 2-வது இடம்!

    September 22, 2025
    விளையாட்டு

    15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் அசலங்கா கருத்து

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நியூயார்க், நியூயார்க்: 9/11 க்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் அல்-கொய்தா தலைவர் அஹ்மத் அல்-ஷரா, அன்காவை சிரிய ஜனாதிபதியாக உரையாற்ற | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாயமான கோயில் சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • லைலா பைசல்: இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவின் அழகான வதந்தி காதலி லைலா பைசலை சந்திக்கவும்
    • O-1 விசா என்றால் என்ன: H-1B விசா உயர்வுக்கு மத்தியில் தொழில் வல்லுநர்களுக்கான அமெரிக்க விசா மாற்று; தகுதி, விசா கட்டணம் மற்றும் விண்ணப்ப செயல்முறை | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டிஐஜி வருண்குமார் வழக்கில் சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த ஐகோர்ட்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.