Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»எச்1பி விசா கட்டண உயர்வு… அமெரிக்காவுக்கு பின்னடைவு, இந்தியாவுக்கு ஆதாயமா?
    வணிகம்

    எச்1பி விசா கட்டண உயர்வு… அமெரிக்காவுக்கு பின்னடைவு, இந்தியாவுக்கு ஆதாயமா?

    adminBy adminSeptember 22, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எச்1பி விசா கட்டண உயர்வு… அமெரிக்காவுக்கு பின்னடைவு, இந்தியாவுக்கு ஆதாயமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

    அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.

    எச்1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள்

    வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் ஏழரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் ஆறு லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.

    இந்நிலையில்தான், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    புதிய கட்டண விதிகள் குறித்து முதல் நாளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படாததால், அமெரிக்காவின் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தின. இதனால், விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதின. இதையடுத்து, கட்டண விதிமுறைகள் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ‘இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை.

    அதேபோல, வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினாலும் கட்டண உயர்வை செலுத்த அவசியம் இல்லை. புதிதாக எச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும். தற்போதைய எச்1பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், “தாய்நாட்டுக்கு சென்றுள்ள எச்1பி விசாதாரர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டிய அவசியமில்லை. புதிய கட்டண உயர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எச்1பி விசா கட்டண உயர்வு என்பது அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த சரியான நட​வடிக்​கை என்கிறது வெள்​ளை ​மாளி​கை.

    கடந்​த 2003-ம்​ ஆண்டில் இருந்து எச்​-1பி ​வி​சா பெறும்​ அமெரிக்க நிறுவனங்கள், இதுவரை பல்லாயிக்கணக்கான அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததாக சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ‘அமெரிக்கா​வில்​ அமெரிக்​கர்​களுக்​கு கிடைக்​க வேண்டிய பணி​களை மீட்​டு ​கொண்​டு வரு​வது​தான்​ அ​திபர்​ ட்​ரம்ப்​பின்​ நோக்​கம்​. அவர் ப​தவி​யேற்​ற பிறகு, அனைத்​து வேலை​ வாய்ப்புக்​கான பலன்​களும்​ அமெரிக்​கா​வில்​ பிறந்​தவர்​களுக்​கு​தான்​ செல்​கின்​றன’ என்கிறது.

    ஆனால், “எச்1பி விசா கட்டண உயர்வு சார்ந்த ட்ரம்ப்பின் அறிவிப்பு நிச்சயம் அமெரிக்காவுக்கு பின்னடைவாக அமையும். முக்கியத் துறைகளில் திறன் படைத்தவர்களை இந்த விசா கட்டணம் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும். அதோடு, இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஆய்வகங்கள், ஸ்டார்ட்-அப்கள், படைப்பாற்றல் திறன்களை மடைமாற்றும் வாய்ப்பு கூடும்.

    இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் முதலானோர் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் வாய்ப்பாகவும் இது அமையும். பல நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தக் கூடும். அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயம் கொடுக்கும்” என்ற பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

    அதேபோல், “எச்1பி விசா கட்டண உயர்வின் பாதிப்பை, வரும் நாட்களில் புதிதாக விண்ணப்பிப்பவர்கள்தான் எதிர்கொள்வார்கள். இதனால், இந்த விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறையும். ஏனெனில், யாரும் 1 லட்சம் டாலர் என்ற கட்டணத்தை செலுத்த போவதில்லை. அதுதான் நிதர்சனம்.

    இப்போது என்ன நடக்கும் என்றால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்கும். அமெரிக்காவில் திறன் படைத்தவர்கள் அதிகம் கிடைக்க மாட்டார்கள்; அதோடு விசாவுக்கான செலவும் அதிகம். இதனால் உலக அளவிலான திறன் மையமாக இந்தியா மேம்படும்” என்றும் தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    “அதேபோல், இனி ஏராளமான திறமையாளர்கள் மீண்டும் தங்கள் பணி சார்ந்து இந்தியாவுக்கு திரும்பப் போகிறார்கள். தொடக்கத்தில் இந்த இடப்பெயர்வு கொஞ்சம் கடினமாக இருக்கும். இருந்தாலும், இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்பு அற்புதமானதாக இருக்கும்” என எச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் இந்தியாவில் செட்டில் ஆன சிலர் கூறிய கருத்துகளும் கவனிக்கத்தக்கது.

    எச்1பி விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அமெரிக்க பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும், திறமைவாய்ந்த பணியாளர்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், அமெரிக்காவின் தொழில்நுட்ப துறை சார்ந்த சூழல் கட்டமைப்பு சரிவடையும் என்பதும் அவர்களது பார்வையாக உள்ளது. ஆகவே, எச்1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை என்பது ட்ரம்ப்புக்கு ‘பேக்ஃபயர்’ ஆகக் கூடும் என்ற கருத்தும் இப்போது வலுத்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    புதிய உச்சம் எட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.560 உயர்வு

    September 22, 2025
    வணிகம்

    ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை 2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்

    September 22, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது: 375 பொருட்கள் விலை குறைந்தது

    September 22, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 2.0 இன்று முதல் அமல்: வரி குறைப்பால் வளர்ச்சி அதிகரிக்கும் – பிரதமர் மோடி கூறுவது என்ன?

    September 22, 2025
    வணிகம்

    ‘வெட்கிரைண்டர்’, ‘ஜாப் ஒர்க்’ ஜிஎஸ்டி வரி 5%-ஆக விரைவில் குறைய வாய்ப்பு: கோவை தொழில்துறையினர் நம்பிக்கை

    September 21, 2025
    வணிகம்

    மீன் வளர்ப்பில் சத்தீஸ்கரின் பெண்கள் குழு: ஆண்டுதோறும் 15 டன் உற்பத்தி, பல லட்சம் லாபம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சார்லி கிர்க் துக்க நிகழ்வில் சந்தித்துக் கொண்ட டொனால்டு ட்ரம்ப் – எலான் மஸ்க்!
    • குறைந்த மின் அழுத்த பிரச்சினை: போராடும் வேங்கடமங்கலம் கிராம மக்கள்!
    • 8 மணி நேரம் தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக இருக்கிறதா? உங்கள் உடல்நலம் குறை கூறக்கூடிய 8 காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘டிரம்பின் எச் 1 பி விசா கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உண்மையான காரணம்…’: கூகிள் தலைமையகத்திற்கு வெளியே தனது புகைப்படத்திற்குப் பிறகு எச் -1 பி விசா கட்டண உயர்வுக்கு இணைய வரவு எம்பிஏ சாய் வாலாவை இணைய வரவு வைக்கிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.