Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“எழுதி வைத்து படிக்கும் விஜய்யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது” – சீமான்
    மாநிலம்

    “எழுதி வைத்து படிக்கும் விஜய்யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது” – சீமான்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எழுதி வைத்து படிக்கும் விஜய்யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது” – சீமான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி சார்பில் 3,937 காலி பணியிடங்கலுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 15.52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

    கேள்விகள் ஆங்கில வழியில் எளிமையாகவும், தமிழ் வழியில் கடினமாகவும் இருந்தன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என அறிவித்துவிட்டு, மற்ற பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?. இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது?. அதே வேளையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.

    பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேரும் பணி நியமனத்துக்கு காத்திருக் கின்றனர். அறநிலையத் துறை, மின்துறை, வனத் துறையில் ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கொண்டுதான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முறை கேட்டுக்கு யார் காரணம்?. முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், கருணை அடிப்படையில் மீண்டும் பணி யில் சேர வாய்ப்பு ஏன் கொடுக்க வேண்டும்?. தேர்வில் தோல்வி அடைந்த பலரும், தமிழகத்தின் மையப் பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர்.

    எனவே, பெரம்பலூரைத் தேர்வு செய்தேன். தவெக தலைவர் விஜய் வந்து சென்றதால் இந்த இடத்தைத் தேர்வு செய்யவில்லை. நான் ஏன் பிரச்சார சுற்றுப் பயணம் செல்லவில்லை என கேட்கின்றனர். தமிழகத்தில் எனக்கு தெரியாத ஊர்களே இல்லை. எங்கு மக்கள் பிரச்சினை இருந்தாலும் அங்கு நான் நிற்பேன். எனவே, எனக்கு சுற்றுப் பயணம் தேவையில்லை.

    தவெக தலைவர் விஜய் என்னை விமர்சித்தார். எனவே, நான் அவரை விமர்ச்சிக்கும் நோக்கில் பல்வேறு கேள்விகளை கேட்கிறேன். ஆனால், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. குறைகூறுவதாக குற்றம் சாட்டுகிறார். அரசியலுக்கு வந்த பின்னர் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். ஆனால், எழுதி வைத்து படிக்கும் விஜயால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 21, 2025
    மாநிலம்

    இதுவரை அதிகரித்த வரியை குறைத்த ஒரே அரசு பாஜக தான்: நயினார் நாகேந்திரன்

    September 21, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி

    September 21, 2025
    மாநிலம்

    ‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை

    September 21, 2025
    மாநிலம்

    கோவையில் 10 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை

    September 21, 2025
    மாநிலம்

    தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் – ஆர்பி. உதயகுமார்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இதுவரை அதிகரித்த வரியை குறைத்த ஒரே அரசு பாஜக தான்: நயினார் நாகேந்திரன்
    • ‘வெட்கிரைண்டர்’, ‘ஜாப் ஒர்க்’ ஜிஎஸ்டி வரி 5%-ஆக விரைவில் குறைய வாய்ப்பு: கோவை தொழில்துறையினர் நம்பிக்கை
    • ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி
    • ‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.