Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இறந்த அஜித் குமாரின் தாயார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு விசாரணையின் போது அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசே உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை முடித்து ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி ஆக.20-ல் ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தனிப்படை வேன் ஓட்டுனர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக சிபிஐக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில் அஜித்குமார் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப் பத்திரிகையை நீதிபதி திருப்பி அனுப்பினார். அதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அந்த குறைபாடுகளை சரிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் நேற்று மீண்டும் வந்தது. அப்போது சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரனும் நீதிபதி முன் ஆஜரானார். சிபிஐ தரப்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் 6 பேருக்கும் குற்றப் பத்திரிகையை படித்து பார்க்க அவகாசம் வழங்கி அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி

    September 21, 2025
    மாநிலம்

    ‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை

    September 21, 2025
    மாநிலம்

    கோவையில் 10 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை

    September 21, 2025
    மாநிலம்

    தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் – ஆர்பி. உதயகுமார்

    September 21, 2025
    மாநிலம்

    “எழுதி வைத்து படிக்கும் விஜய்யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது” – சீமான்

    September 21, 2025
    மாநிலம்

    ஜென் ஸீ இளைஞர்களை வளைக்கும் விஜய் வியூகம் எடுபடுமா?

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? – சு.வெங்கடேசன் கேள்வி
    • ‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை
    • கோவையில் 10 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை
    • மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
    • தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் – ஆர்பி. உதயகுமார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.