Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    ஆன்மீகம்

    நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்

    adminBy adminSeptember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மூலவர்: பாலமுருகன் உற்சவர்: சுப்பிரமணியர் தலவரலாறு: பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு உபன்யாசம் செய்ய முருக பக்தர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் அவரை சர்ப்பம் வழிமறித்தது. தனக்கு வழிவிடுமாறு பக்தர் கேட்டதும், நாகம் நகரத் தொடங்கியது. அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார். அது புதர் மண்டிக்கிடந்த இடத்தில் புற்று அருகில் சென்றதும் திடீரென மறைந்து போனது. பின்னர் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு மண்டபம், திருக்குளத்துடன் கோயில் இருந்ததற்கான அடையாளம் தென்பட்டது.

    இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த கோயிலும் ஒன்று என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பக்தர், அந்த இடத்தை சீர்படுத்தி, பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். தற்போது பழைய கோயிலுக்கு அருகில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

    கோயில் சிறப்பு: மயில் வாகனத்துக்கு முன்பு கருவறையில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கிறார். ஒருசமயம் லாரியில் தேங்காய் லோடு ஏற்றும்போது, லாரி ஓட்டுநர் தேங்காய் வியாபாரியிடம் பாலமுருகனுக்கு உடைக்க ஒரு தேங்காய் கேட்டுள்ளார். அவர் தேங்காய் தர மறுத்து, ‘பாலமுருகனுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்று கிண்டலாக கேட்டுள்ளார். அப்போது வியாபாரி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தேங்காய் ஒன்றில் இரண்டு கொம்புகள் காணப்பட்டன. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த வியாபாரி, பாலமுருகனிடம் மன்னிப்பு கோரினார். மேலும் கொம்பு முளைத்த தேங்காயை கோயிலில் வைத்து பாதுகாக்கும்படி கூறினார். நினைத்த காரியம் கைகூட இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அமைவிடம்: ஒசூரிலிருந்து (16 கிமீ) உத்தனபள்ளி வழியாக ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 5-7.30 மணி வரை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

    September 21, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

    September 20, 2025
    ஆன்மீகம்

    பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

    September 20, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்: திருப்​பதி மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
    • ஆஸ்கருக்கு செல்கிறது ‘ஹோம்பவுண்ட்’!
    • சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்க அலுவலகம் திறப்பு
    • எச்1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: விமான நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
    • உலக அல்சைமர் தினம் 2025: முதல் அறிகுறிகள் குடும்பங்கள் பெரும்பாலும் தவறவிடுகின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.