Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 
    தேசியம்

    ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது.

    திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்கு சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயில் திணித்து திருடி வந்துள்ளார்.

    ஒருநாள் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சுமார் ரூ.100 கோடி வரை வெளிநாட்டு கரன்சிகளை அவர் திருடியது தெரியவந்தது. திருடிய பணத்தில் திருப்பதியில் வீடு, நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு திடீரென லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதையடுத்து, வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், ரவிக்குமார் ரூ.100 கோடி அளவுக்கான சொத்துகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் ரவிக்குமாரிடம் இருந்து சில சொத்துகளை தங்களது பினாமிகளின் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

    கடந்த ஆண்டு ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். திருமலையில் பணம் எண்ணும் இடத்தில் ஊழியர் ரவிக்குமார் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டு கரன்சியை தனது டிராயரில் மறைத்து வைக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது: ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக இருந்த அப்போதைய திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டியும், நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியும் இணைந்து சுவாமியின் பணத்தை பல வழிகளில் கொள்ளை அடித்துள்ளனர். அன்னதான பொருட்கள், நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் என பலவற்றை உதாரணமாக கூறலாம். கடைசியில் சுவாமியின் உண்டியல் பணத்தைகூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. உண்டியல் பணத்தை திருடியவரிடம் இருந்து இவர்கள் திருடியுள்ளனர். ரூ.100 கோடி திருட்டு வழக்கை லோக் அதாலத்தில் பஞ்சாயத்து செய்து சமரசம் செய்துள்ளனர். லோக் அதாலத்தில் சிறுசிறு வழக்குகளில் இரு தரப்பினர் இடையே சமரசம் செய்து வழக்கை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால், சுவாமியின் ரூ.100 கோடி பணத்தை திருடிய வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் எவ்வாறு தீர்த்து வைக்க முடியும்.

    எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது. இதில் கண்டிப்பாக குற்றவாளிகள் சிக்குவார்கள். ஆனால், ரவிக்குமாரின் உயிருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி, தெலங்கானாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?

    September 21, 2025
    தேசியம்

    மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் ‘ஆயில் குமார்’

    September 21, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து

    September 21, 2025
    தேசியம்

    இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூரிய கிரகணம் 2025: சூரிய கிரகணத்தின் போது திடீர் இருளுக்கு விலங்குகள் எவ்வாறு செயல்படுகின்றன
    • பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?
    • ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை
    • தொடர்ந்து தண்ணீர் குடிப்பது ஆனால் இன்னும் நீரிழப்புடன் உணர்கிறீர்களா? இந்த முக்கியமான நீரேற்றம் உறுப்பை அவர்கள் காணவில்லை என்று பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர்டில் பீதி: K 100K H -1B விசா கட்டணம் இந்திய பயணிகளிடையே விமான குழப்பத்தைத் தூண்டுகிறது – வாட்ச் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.