Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு
    தேசியம்

    இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாவ்நகர்: ‘‘பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் இந்​தி​யா​வின் முக்​கிய எதிரி. நாம் சந்​திக்​கும் நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்’’ என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்.

    குஜ​ராத்​தின் பாவ்​நகரில் ‘சமுத்ர சே சம்​ரி​தி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்​சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது ரூ.34,200 கோடி மதிப்​பிலான கடல்​சார் மற்​றும் பிராந்​திய வளர்ச்சி திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

    இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: விஸ்​வபந்து (உல​கின் நண்​பன்) என்ற உணர்​வுடன் நாடு தற்​போது முன்​னேறிக் கொண்​டிருக்​கிறது. இந்த உலகில் நமக்கு முக்​கிய எதிரி​கள் யாரும் இல்​லை. பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் நமது மிகப் பெரிய எதிரி. இதை நாம் தோற்​கடிக்க வேண்​டும். வெளி​நாடு​களைச் அதி​கம் சார்ந்​திருப்​பது, நமது தோல்​வியைத்​தான் காட்​டு​கிறது. உலகளா​விய அமை​தி, நிலைத்​தன்​மை, செழிப்பு ஆகிய​வற்​றுக்கு உலகின் அதிக மக்​கள் தொகையை கொண்ட இந்​தியா தற்​சார்பு நாடாக மாற வேண்​டும்.

    நாம் பிற​நாடு​களைச் சார்ந்​திருந்​தால், நமது சுய கவுர​வம்​தான் பாதிக்​கும். 140 கோடி மக்​களின் எதிர்​காலத்தை நாம் பிறரிடம் விட முடி​யாது. மற்​றவர்​களை சார்ந்​திருக்க கூடாது. எதிர்​கால தலை​முறை​யினரின் எதிர்​காலத்தை நம்​மால் அபாய கட்​டத்​தில் விட முடி​யாது. நமது நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்.

    இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்​கிரஸ் அரசு, நாட்​டின் பலத்தை நீண்ட கால​மாக அறிய​வில்​லை. உலகமய​மாக்​கல் தொடங்​கிய போது, இறக்​குமதி பாதையை அந்த அரசு தேர்ந்​தெடுத்​தது. மேலும் பல கோடி மதிப்​பிலான ஊழல்​களி​லும் ஈடு​பட்​டது. நாட்​டின் உண்​மை​யான பலத்​துக்கு காங்​கிரஸின் கொள்கை தடை​யாக இருந்​தது.

    கடல்​வளத்​திலிருந்து தொடங்​கும் இந்​தி​யா​வின் பயணத்தை வெளிக்​காட்​டும் இந்த முக்​கிய நிகழ்ச்​சி​யின் மைய​மாக பாவ்​நகர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. எனது 75-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு குஜ​ராத்​தில் 1 லட்​சம் பேர் ரத்த தானம் வழங்​கி​யுள்​ளனர். பல நகரங்​களில் தூய்மை நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குஜ​ராத்​தில் 30,000-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் மருத்​துவ முகாம்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ள அனை​வருக்​கும்​ நன்​றி. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் ‘ஆயில் குமார்’

    September 21, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து

    September 21, 2025
    தேசியம்

    ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    September 21, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தொடர்ந்து தண்ணீர் குடிப்பது ஆனால் இன்னும் நீரிழப்புடன் உணர்கிறீர்களா? இந்த முக்கியமான நீரேற்றம் உறுப்பை அவர்கள் காணவில்லை என்று பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர்டில் பீதி: K 100K H -1B விசா கட்டணம் இந்திய பயணிகளிடையே விமான குழப்பத்தைத் தூண்டுகிறது – வாட்ச் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு
    • யு.எஸ்.
    • கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் ‘ஆயில் குமார்’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.