Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்
    மாநிலம்

    ‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர்

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன்மூலம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் திருபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொது மக்கள் பயன் பெறுவர்.

    மேலும், பொதுமக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை வடிவமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

    “சென்னை குடிநீர் செயலி” புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பொதுமக்களால் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் தானாகவே கணினி வழியாகப் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும்.

    மேலும், புகார் பதிவு செய்த நபருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இச்செயலியின் முக்கிய சிறப்பம்சமாக புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், புகார்களை இணையதளம், மின்னஞ்சல், 8144930308 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் கியூஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம். பொதுமக்களின் வசதிக்காக இச்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் செயலியினை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்புகார்கள் அனைத்தும் சென்னை குடிநீர் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    September 20, 2025
    மாநிலம்

    “விவசாயிகளின் வயிற்றில் அடித்து, நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன்” – திருவாரூரில் விஜய் காட்டம்

    September 20, 2025
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

    September 20, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
    • ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்
    • “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்
    • “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
    • பெரியவர்களால் நுகரப்படும் பொதுவான பானங்கள், குழந்தைகளுக்கு இந்த மூலப்பொருள் உள்ளது, இது கொடிய பெருங்குடல் புற்றுநோயை எரிபொருளாகக் கொண்டுள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.