Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுகவுக்கு அமித் ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமர்சனம்
    மாநிலம்

    அதிமுகவுக்கு அமித் ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமர்சனம்

    adminBy adminSeptember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுகவுக்கு அமித் ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: அதிமுகவுக்கு அமித்ஷா வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கே.சங்கரன், ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது பாஜக அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார். லண்டனுக்கு சென்று தான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.

    அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கம்யூனிஸ்ட்களை பார்த்து, முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள், திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார். திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை.

    நீங்கள் தான் தவளை. பாஜக எனும் பாம்பு உங்களை விழுங்கிக்கொண்டு இருக்கிறது. நீங்க உங்கள் கட்சியை கவனியுங்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார். அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தர்மத்தை விட மக்கள் தர்மம் தான் முக்கியம். கூட்டணி வைப்பதும் மக்களின் நலனுக்காக தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போது எந்த கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம். இவ்வாறு வாசுகி பேசினார்.

    திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், ஆர்.பேச்சிமுத்து, எஸ்.அப்பாதுரை, டி.ராஜா, டி.சண்முகராஜ், மாநில குழு உறுப்பினர் பி.பூமயில் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

    September 20, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 20, 2025
    மாநிலம்

    ‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்

    September 20, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லை, ஆனாலும் பிரதமர் மோடி…” – நிர்மலா சீதாராமன் பேச்சு

    September 20, 2025
    மாநிலம்

    ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மல சோதனை 90% துல்லியத்துடன் பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு
    • மீதமுள்ள அரிசியை மிருதுவான மகிழ்ச்சியாக மாற்றவும்: நீங்கள் முயற்சிக்க வேண்டிய எளிய செய்முறை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்
    • கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.