Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
    வணிகம்

    இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ட்ரம்ப்பின் வரி விதிப்பால், சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.

    இதையடுத்து, இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத் துறை துணை பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லி வந்தனர். இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கான இந்திய பிரதிநிதியும், மத்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினரை லிஞ்ச் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

    இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது. இருதரப்பும் ஏற்கக்கூடிய வகையில் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக குழு வட்டாரங்கள் தரப்பில், “இந்திய குழுவினர் உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்தது. இரு நாடுகள் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். வரும் நவம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும். தற்போது இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைக்காக கடந்த மே மாதம் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இம்முறையும் அவர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் (செப். 18) ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது. இந்​தி​யா​வின் நம்​பக​மான நட்பு நாடாக அமெரிக்கா விளங்​கு​கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் உச்சம்: பவுனுக்கு ரூ.480 உயர்வு!

    September 20, 2025
    வணிகம்

    ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்ததால் அதானி குழும பங்குகளின் விலை எழுச்சி

    September 20, 2025
    வணிகம்

    ‘ஜிஎஸ்டி வரி எப்போது ஒரே விகிதமாக மாறும்?’ – நிர்மலா சீதாராமன் விவரிப்பு

    September 19, 2025
    வணிகம்

    புதிய நடைமுறை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல்!

    September 19, 2025
    வணிகம்

    சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி – ஏற்றுமதி வரியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    September 19, 2025
    வணிகம்

    இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்
    • கூர்மையான கண்பார்வைக்கு உணவில் சேர்க்க 10 பொதுவான உணவுகள்
    • ‘பள்ளங்கள் இயற்கையாக உருவாகின்றன’ – பெங்களூரு சாலைகள் குறித்து டி.கே.சிவகுமார் கருத்து
    • ‘மரணத்தை விட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை!’ – காசாவில் இருந்து ஒரு வேதனைக் குரல்
    • “தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லை, ஆனாலும் பிரதமர் மோடி…” – நிர்மலா சீதாராமன் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.