Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்
    மாநிலம்

    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    கோவை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க ரூ.19.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த விவரங்களை கொண்ட எலக்ட்ரானிக் பதாகை, இணையதள (வை ஃபை) சேவை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும். மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரி குறைக்கப்பட்ட நடவடிக்கை வியாபாரத்தை அதிகரிக்கும். மக்கள் சேமிக்க வாய்ப்பு ஏற்படும். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி. மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு வர்த்தக தொழில் அமைப்பினர் இந்நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த பின்பும் இதுபோன்று அவர் பேசி வருவது அவரின் விரக்தியை எடுத்துக் காட்டுகிறது. பாஜக வெற்றி பெறும்போது இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்புவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் பாஜக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கிரைண்டர்களுக்கு வரி குறைப்பு தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் திராவிட மாடல், சமூக நீதி மாடல் என்று திமுக ஆட்சி நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    அரசியல் கட்சி நிகழ்வுகளில் பொது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    September 20, 2025
    மாநிலம்

    கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வராதீர்கள் என விஜய் தெரிவிக்கலாமே? – நீதிபதி அறிவுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    ‘பிங்க்’ பஸ் கண்டிஷனில் தான் திமுக இருக்கிறது: உதயநிதிக்கு இபிஎஸ் பதிலடி

    September 19, 2025
    மாநிலம்

    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

    September 19, 2025
    மாநிலம்

    சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்கிறார் அமைச்சர் நேரு… உள்ளூர் பஞ்சாயத்தை தீர்க்க ஆளில்லை!

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா?” – விமர்சனங்களுக்கு சாய் அபயங்கர் பதில்!
    • வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    • ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்ததால் அதானி குழும பங்குகளின் விலை எழுச்சி
    • உங்கள் படுக்கை அழுக்காக இருந்தால் எப்படி சொல்வது: அறிகுறிகள், துப்புரவு உதவிக்குறிப்புகள் மற்றும் பராமரிப்பு வழிகாட்டி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜான்வி கபூரின் ‘ஹோம்பவுண்ட்’ படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.