Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேரில் வர வேண்டாம்: தவெக
    மாநிலம்

    கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேரில் வர வேண்டாம்: தவெக

    adminBy adminSeptember 19, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேரில் வர வேண்டாம்: தவெக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தவெக தலைவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே, இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    1. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.

    2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள். காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (B Lamp Poors), மின் கம்பங்கள் (EB Post). மின்மாற்றிகள் (EB Trinsformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.

    3. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழலாம்.

    4. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

    5. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.

    6. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

    7. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே. இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

    8 மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடுக்காதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    9. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

    10. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போதும், விஜய் வருகை உள்ளிட்டவற்றின்போதும் தொண்டர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

    12. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக நேற்று தவெக வழக்கில் ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த யோசனையையும் உள்ளடக்கி 12 நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது தவெக.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

    September 19, 2025
    மாநிலம்

    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்கிறார் அமைச்சர் நேரு… உள்ளூர் பஞ்சாயத்தை தீர்க்க ஆளில்லை!

    September 19, 2025
    மாநிலம்

    சொன்னதை கேட்கலையே அண்ணன்… வேட்பாளரை மாற்றாததால் திமுகவில் இணைந்த நாதக தம்பிகள்

    September 19, 2025
    மாநிலம்

    எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இஸ்ரேல் ராணுவம் புதிய மிரட்டல்: அச்சத்துடன் வெளியேறும் காசா மக்கள் – நடப்பது என்ன?
    • ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு!
    • 300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
    • தலையின் வலது பக்கத்தில் வலியை ஏற்படுத்துகிறது: காரணங்கள் மற்றும் வகைகளை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.