Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஹுரியத் முன்னாள் தலைவர் இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் மெகபூபா உள்ளிட்ட தலைவர்களுக்கு வீட்டுக்காவல்
    தேசியம்

    ஹுரியத் முன்னாள் தலைவர் இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் மெகபூபா உள்ளிட்ட தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஹுரியத் முன்னாள் தலைவர் இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் மெகபூபா உள்ளிட்ட தலைவர்களுக்கு வீட்டுக்காவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரி​யத் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட்மறைவை முன்​னிட்​டு, பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தடுக்க, முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்சி தலை​வர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

    ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரண​மாக சோப்​பூரில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார். இவரது இறு​திச் சடங்​கில் பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தவிர்க்க காஷ்மீரில் அரசி​யல் தலை​வர்​கள் சிலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

    காஷ்மீர் முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்​சி​யின் தலை​வர் சாஜத் லோன், ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் தற்​போதைய தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு முதல் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மெகபூபா முப்தி வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த தலை​வர் அப்​துல் கனி பட் மறைவுக்கு இரங்​கல் தெரி​விப்​பதை தடுத்து நிறுத்​து​வதற்​காக அரசி​யல் தலை​வர்​களை வீட்​டுக்​காவலில் வைக்​கும் முடிவு மோச​மானது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை என்​பதை இது காட்​டு​கிறது. ஹஸ்​ரத்​பால் தர்​கா​வில் நடந்த சம்​பவம் மக்​களின் கோபத்தை காட்​டி​யுள்​ளது. மக்​களின் ஆழ்ந்த கோபத்​திலிருந்து எதை​யும் கற்​றுக்​கொள்ள மறுக்​கும் பாஜக, மக்​களின் நீண்​ட​கால உணர்​வு​களை அடக்​கு​கிறது.

    காஷ்மீரில் அமை​தியை ஏற்​படுத்த பாஜகவுக்கு ஆர்​வம் இல்​லை. அரசி​யல் காரணங்​களுக்​காக காஷ்மீரை எப்​போதும் பதற்ற நிலை​யிலேயே வைத்​துள்​ளது. இது அபாயகர​மானது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார். சாஜத் லோன் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள தகவலில், ‘‘பேராசிரியர் அப்​துல் கனி பட் இரங்​கல் கூட்​டத்​தில் பங்​கேற்​பதை தடுப்​ப​தற்​காக நான் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளேன். இதை என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை. அவருக்கு இறுதி அஞ்​சலி செலுத்த எங்​களுக்கு உரிமை உள்​ளது’’ என்றார்.

    ஹுரி​யத் அமைப்​பின் தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘அப்​துல் கனி பட் இறுதிச் சடங்கை விரை​வில் முடிக்​கச் சொல்லி அவரது குடும்​பத்​தினரை அரசு அதி​காரி​கள் வற்​புறுத்​து​வது வேதனையளிக்​கிறது. எனது 35 ஆண்டு கால நண்​பர் மற்​றும் வழி​காட்​டி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​கும் உரிமை எனக்கு மறுக்​கப்​படு​கிறது. இது தாங்​கி​கொள்​ள முடி​யாத கொடூரம்​’’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அதானி குழும விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு கவலை அளிக்கிறது: எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கருத்து

    September 19, 2025
    தேசியம்

    கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் ஆன்லைனில் ரூ. 3 லட்சம் மோசடி

    September 19, 2025
    தேசியம்

    ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு

    September 19, 2025
    தேசியம்

    மாலத்தீவு பத்திரங்களை திருப்பி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்தது இந்தியா

    September 19, 2025
    தேசியம்

    தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து திக்விஜய சிங் சந்தேகம்

    September 19, 2025
    தேசியம்

    நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி? 
    • ‘சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென தனி இடம் உருவாக்கியவர் ரோபோ சங்கர்’ – விஜய் புகழஞ்சலி
    • செப்பு பாட்டில்களிலிருந்து குடிப்பது அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல: 5 வகையான நபர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதானி குழும விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு கவலை அளிக்கிறது: எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கருத்து
    • கரூர் பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.