மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,641 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,342 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியிலிருந்து 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் 119.18 அடியிலிருந்து 118.75 அடியாகவும், நீர் இருப்பு 92.16 டிஎம்சியிலிருந்து 91.49 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.