Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுக்‘கோட்டையை’ பிடிக்க புது ரூட் போடும் பாஜக! – விட்டுக் கொடுப்பாரா விஜயபாஸ்கர்?
    மாநிலம்

    புதுக்‘கோட்டையை’ பிடிக்க புது ரூட் போடும் பாஜக! – விட்டுக் கொடுப்பாரா விஜயபாஸ்கர்?

    adminBy adminSeptember 18, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுக்‘கோட்டையை’ பிடிக்க புது ரூட் போடும் பாஜக! – விட்டுக் கொடுப்பாரா விஜயபாஸ்கர்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடந்த தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமானை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. இதனையடுத்து, 2026 தேர்தலுக்கு புதுக்கோட்டையில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம். இடம் காலியாகி இருப்பதால் புதுக்கோட்டையை நாமும் கேட்டுப் பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பாஜக தலைகள் மத்தியிலும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

    புதுக்​கோட்டை மாவட்ட அதி​முக-வை பொறுத்​தவரை முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் வைத்​தது தான் சட்​டம். 2012-ல் புதுக்​கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்​தேர்​தலில் மன்​னர் பரம்​பரையைச் சேர்ந்த கார்த்​திக் தொண்​டை​மானுக்கு வாய்ப்​பளித்து அவரை ஜெயிக்க வைத்​தார் ஜெயலலி​தா. 2016 பொதுத் தேர்​தலிலும் அவருக்கே வாய்ப்​பளித்​தார்.

    அதே​போல் அம்மா அடை​யாளம் காட்​டிய வேட்​பாளர் என்​ப​தால் 2021-லும் தொண்​டை​மானுக்கே சீட் கொடுத்​தது அப்​போதைய ஓபிஎஸ் – இபிஎஸ் தலை​மை. இரண்டு முறை தொண்​டை​மானை எம்​எல்ஏ ஆக்​கிய​தில் விஜய​பாஸ்​கருக்கு முழுப் பங்​குண்​டு. ஆனால், இரண்டு தேர்​தல்​களில் வென்ற கார்த்​திக் தொண்​டை​மா​னால் கடந்த முறை கரைசேர முடிய​வில்​லை. இதையடுத்து கட்சி நடவடிக்​கை​களை விட்டு ஒதுங்கி இருந்த அவர், அண்மை​யில் விஜய​பாஸ்​கர் மீதே பழி​போட்​டு​விட்டு திமுக-​வில் இணைந்​தார்.

    இதையடுத்​து, 2026-ல் புதுக்​கோட்டை தொகு​தி​யையே கார்த்​திக் தொண்​டை​மானுக்கு திமுக கொடுத்​தா​லும் கொடுக்​கலாம் என்று சொல்​லப்​படும் நிலை​யில், அதி​முக தரப்​பில் புதுக்​’கோட்​டையை’ பிடிக்க பலரும் ரூட் பிடிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். மக்​கள​வைத் தேர்​தலில் திருச்சி தொகுதியில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தைச் சேர்ந்த ப.கருப்​பை​யாவை அதி​முக வேட்​பாள​ராக நிறுத்​தி​ய​தில் விஜய​பாஸ்​கரின் முயற்சி முக்​கியமானது.

    அந்த தெம்​பில் கருப்​பையா இப்​போது புதுக்​கோட்​டைக்கு எம்​எல்ஏ ஆகி​விடும் கனவில் இருக்​கி​றார். இவரைப் போலவே இளைஞரணி செய​லா​ளர் வீ.பழனிவேல், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான நெடுஞ்​செழியன் ஆகி​யோ​ருக்​கும் ஆசை அலை​யடிக்​கிறது. ஆனால், எத்​தனை பேர் ஆசைப்​பட்​டாலும் விஜய​பாஸ்​கர் யாரை டிக் அடிக்​கி​றாரோ அவருக்​குத்​தான் புதுக்​கோட்டை சீட்.

    அதி​முக நில​வரம் இப்​படி இருக்க, கூட்​டணி தோழ​னான பாஜக-​வும் இம்​முறை புதுக்​கோட்​டைக்கு குறிவைக்​கிறது. கறம்​பக்​குடி அருகே உள்ள கடுக்காக்​காட்​டைச் சேர்ந்த முரு​கானந்​தம் கடந்த அதி​முக ஆட்​சி​யில் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​யுடன் நெருக்​கம் வைத்​துக் கொண்டு சோலார் விளக்கு அமைத்​தல் உள்​ளிட்ட அரசு ஒப்​பந்​தங்​களை தனது சகோ​தரர் பழனிவேலு​வுடன் சேர்ந்து எடுத்​துச் செய்து வந்​தார்.

    வேலுமணிக்கு சொந்​த​மான இடங்​களை லஞ்ச ஒழிப்​புத் துறை​யும் அமலாக்​கத் ​துறை​யும் துழா​விய போது முரு​கானந்​தம், பழனிவேல் சம்பந்தப்பட்ட இடங்​களை​யும் கிளறினர். அடுக்​கடுக்​கான சோதனை​களை தாக்​குப்​பிடிக்க முடி​யாத முரு​கானந்​தம் அதி​முக-​விலிருந்து விலகி பாஜக-​வில் தஞ்​சமடைந்​தார். பாஜக-​வும் அவருக்கு மாவட்​டப் பொருளாளர் பதவியை வழங்கி ‘கவுர​வித்​தது’. இதையடுத்து மாவட்​டத் தலை​வர் பதவிக்​கும் படை திரட்​டி​னார் முரு​கானந்​தம். அது நடக்​காமல் போய் மாநில நிர்​வாகி​யான ராமச்​சந்​திரன் மாவட்​டத் தலை​வ​ரா​னார்.

    இப்​போது இரு​வ​ருமே ஆளுக்​கொரு திசை​யில் அரசி​யல் செய்​தா​லும் இரு​வ​ருமே விஜய​பாஸ்​கருக்கு வேண்​டப்​பட்​ட​வர்​களாக இருக்​கி​றார்​கள். இதனால் இரு​வ​ருமே விஜய​பாஸ்​கர் சிபாரிசில் புதுக்​கோட்டை சீட்டை பிடிக்க புது ரூட் போட்டுக்​கொண்டு இருக்​கி​றார்​கள்.

    இது குறித்து அதி​முக தரப்​பில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “எங்​கள் கட்​சி​யைச் சேர்ந்த கருப்​பையா புதுக்​கோட்டை எம்​எல்ஏ தேர்​தலில் போட்​டி​யிடும் திட்​டத்​தில் இருந்​தவர். அவரை மக்​கள​வைத் தேர்​தலில் இறக்​கி​விட்​டதே விஜய​பாஸ்​கர் தான். மணல் குவாரி பிசினஸ் வட்​டாரத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால், ஜெயிக்க முடி​யாது என்று தெரிந்​தும் பணத்தை தாராள​மாய் செல​வழித்​தார் கருப்​பை​யா. அவர் இப்​போது புதுக்​கோட்டை தொகு​தியை கட்​டாய​மாகக் கேட்​கி​றார்.

    அதே​போல், புதுக்​கோட்டை தொகு​தியை பெறு​வதற்​காக எது​வும் செய்​யத் தயா​ராய் இருக்​கி​றார் பழனிவேல். முன்​னாள் எம்​எல்​ஏ-​வான நெடுஞ்செழிய​னும் பிடி​வாத​மாய் இருக்​கி​றார். இப்​படி மூன்று முக்​கிய நபர்​கள் மோது​வ​தால் யாருடைய பொல்​லாப்​பும் வரா​மல் இருக்க தொகுதியை பாஜக-வுக்கு தள்​ளி​விடலாம் என நினைக்​கி​றார் விஜய​பாஸ்​கர். அதன்​படி தொகுதி பாஜக-வுக்​குப் போனால் தனக்கு மிக​வும் நெருக்கமான ராமச்​சந்​திரனுக்​குத்​தான் அவர் சிபாரிசு செய்​வார்” என்​கி​றார்​கள்.

    இது குறித்து ராமச்​சந்​திரனிடமே பேசினோம். “எங்​களது கட்​சிப் பணி​களால் தமி​ழ​கத்​திலேயே புதுக்​கோட்டை மாவட்ட பாஜக தான் நம்​பர் ஒன் இடத்தில் இருக்​கிறது. திமுக கூட்​ட​ணி​யில் யாரை நிறுத்​தி​னாலும் அவர்​களை தோற்​கடிக்​கும் வல்​லமை​யும் எங்​களுக்கு இருக்​கிறது. இதையே தகுதி​யாகச் சொல்லி புதுக்​கோட்​டையை பாஜக-வுக்கு ஒதுக்​கச் சொல்​லிக் கேட்​போம்.

    இங்கு போட்​டி​யிட எனக்​கும் விருப்​பம் உள்​ளது. கடந்த நாற்​பது ஆண்​டு​களுக்​கும் மேலாக அதி​முக-​வினருடன் நல்ல நட்​புற​வில் இருப்​ப​தால் விஜயபாஸ்​கர் உள்​ளிட்ட அனை​வ​ருமே எனக்கு முழு​மை​யான ஆதரவை அளிப்​பார்​கள். ஒரு​வேளை, தொகுதி எங்​களுக்கு கிடைக்​காமல் போனால் கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாள​ருக்​காக முழு மனதுடன் வேலை செய்து அவரை ஜெயிக்க வைப்​போம். இம்​முறை அமைச்​சர் ரகுப​தியே வந்து நின்றாலும் திமுக-வுக்கு இங்கு வேலை இல்​லை” என்​றார் அவர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?

    September 19, 2025
    மாநிலம்

    நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

    September 19, 2025
    மாநிலம்

    “தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    September 18, 2025
    மாநிலம்

    கோயிலில் அனுமதி மறுப்பு விவகாரம்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை

    September 18, 2025
    மாநிலம்

    ‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85% நிறைவு: இஸ்ரோ தலைவர் தகவல்

    September 18, 2025
    மாநிலம்

    திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “எப்போதும் சிரிப்பை பரிமாறிய மனிதர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
    • ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?
    • கொக்கோ அல்லது கோகோ: சமையல் மற்றும் பேக்கிங்கிற்கு சிறந்த சாக்லேட் பவுடரை எவ்வாறு தேர்வு செய்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஜியோஸ்டாருக்கே உரிமை” – ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப நீதிமன்றம் தடை!
    • நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.