Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்
    மாநிலம்

    “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. அதில் 5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். அதுபோல், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பெறும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிரியர் ஆகி பல ஆண்டுகள் பணியாற்றி ஆண்டு தோறும் ஏராளமான மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, மதிப்பெண்கள் எடுக்க வைத்த பின்பும் தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்கிற நிலை ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்க கூடியது. மேலும் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்ற கல்வியை மீண்டும் மீண்டும் பயிற்றுவிப்பதன் மூலம் தங்களை மென்மேலும் செழுமைப்படுத்திக் கொள்கின்றனர்.

    ஆனால் தகுதித் தேர்வு என்கிற பெயரில் பாடத்திட்டம் அல்லாமல் வேறு பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராவது போல தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் செலவழிக்க வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அவர்களும் மாணவர்களாக படிக்க வேண்டும் என்பது கற்பிக்கும் மனநிலையில் இருந்து மாறி மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குமான கல்வியையும் பாதிக்கும்.

    மேலும் தற்போது பணியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் 25, 30 வயதுகளில் ஆசிரியர் கல்வியை முடித்துவிட்டு, நீண்ட காலம் வேலைக்காக காத்திருந்து 35, 40 வயதுகளில் பணியில் சேர்ந்திருப்பார்கள். அவர்களின் மீதமுள்ள பணிக்காலம் 20, 25 ஆண்டுகள் தான் இருக்கும். தங்களின் இளமைக் காலத்தை வேலை தேடியும், வேலைக்காக தயார்படுத்தியும் பொருளாதார நெருக்கடிகளில் அவதிப்பட்டிருப்பார்கள்.

    அதனால் உரிய காலத்தில் இல்லற வாழ்க்கை அமையாமல் காலம் தாழ்த்தி திருமணம் செய்திருப்பார்கள். வாழ்நாளின் சரிபாதி காலத்தை பொருளாதார சிரமத்துடன் கழித்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு தான் ஓரளவுக்கு பொருளாதார மேம்பாடு அடைந்து, குடும்பத்தை பராமரித்து, பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை கொடுப்பார்கள். ஓய்வு பெறுவதற்கு 10, 15 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்களின் வேலையை பறிப்பது வாழ்வாதாரத்தை பறிப்பதாகும். அவர்கள் பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணம் போன்றவை பாதிக்கப்படும்.

    எனவே ஒன்றரை லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கருதி இந்த தீர்ப்பினை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    September 18, 2025
    மாநிலம்

    2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

    September 18, 2025
    மாநிலம்

    அதிமுக உள்கட்சி விவகாரங்களால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது: ஹெச்.ராஜா

    September 18, 2025
    மாநிலம்

    அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள்: தவெக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

    September 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வழக்கு: சட்டத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரண்டு பாகமாக ‘எஸ்டிஆர் 49’ – வெற்றிமாறன் தகவல்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    • அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: காஞ்சிபுரத்தில் பல லட்சம் மதிப்பு கொலு பொம்மைகள் தேக்கம்
    • யு.எஸ். ஹெல்த்கேர் Vs இந்தியன் ஹெல்த்கேர்: அமெரிக்கன் பெண் எது சிறந்தது என்பதை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்க் மனிதகுலத்தின் முதல் செவ்வாய் காலனிக்கு தைரியமான புதிய காலவரிசையை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.