Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
    மாநிலம்

    தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு மிதவை கப்பல் மற்றும் தோணிகள் மூலம் கட்டுமான பொருட்கள், காய்கறிகள் என பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லக் கூடிய மிதவை கப்பல் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மிதவை கப்பலின் அடியில் உள்ள டேங்க் பொதுவாக பேலஸ்ட் டேங்க் (Ballast Tank) என்று அழைக்கப்படுகிறது. இதுதான், கப்பலின் நிலைத் தன்மையை அதிகரித்து, கடலில் கப்பல் மிதக்க முக்கிய பாக மாகும்.

    இந்த டேங்க்குகளில் தண்ணீரை நிரப்பி அல்லது வெளி யேற்றி, கப்பலின் எடையை மாற்றி, மிதக்கும் தன்மையையும், நிலைத்தன்மையையும் கட்டுப்படுத்த முடியும். அலைகள் அல்லது காற்றால் கப்பல் நிலைத்தன்மையை இழக்கும்போது, பேலஸ்ட் டேங்க்குகளில் தண்ணீரை நிரப்பி கப்பலை நிலைப்படுத்தலாம். கப்பலின் எடையை அதிகரிப்பதன் மூலம் அதன் மிதக்கும் தன்மையை கட்டுப்படுத்தவும், தேவையான ஆழத்தில் மிதக்கவும் இது உதவுகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நின்ற மிதவை கப்பலில் உள்ள பேலஸ்ட் டேங்க்கை சுத்தம் செய்வதற்காக டேங்க்கின் மூடியை நேற்று மாலை திறந் துள்ளனர். குறுகலான அந்த பகுதி வழியாக திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜார்ஜ் ஷரோன் (25) என்பவர் டேங்க்குக்குள் இறங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார் (22) என்பவர் இறங்கியுள்ளார்.

    இருவரும் வெளியில் வராததால், புன்னக்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்த தாமஸ் மகன் ஜெனிஸ்டன் (35) என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். 3 பேரும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

    டேங்க்கின் மூடி குறுகலாக இருந்ததால், வெல்டிங் இயந்திரம் மூலம் சில அடிகள் வெட்டி அகற்றப்பட்டன. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் தார்ப்பாய் கொண்டு மூடியபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு தீயணைப்பு படை வீரர் இன்னாசி உரிய மூச்சு சுவாச கருவி உதவியுடன் டேங்குக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு 3 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொழிலாளர்கள் 3 பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆக்ஸிஜன் பற்றாக்குறையா?

    தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த டேங்க் மூடப்பட்டு இருந்ததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் மூவரும் மூச்சுத்திணறி இறந்திருக்க லாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், விஷவாயு தாக்கி உயிரிழந்தார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்

    September 18, 2025
    மாநிலம்

    ‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது’ – இபிஎஸ்

    September 18, 2025
    மாநிலம்

    தரவு உள்ளீட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: மின் வாரியம் தகவல்

    September 18, 2025
    மாநிலம்

    மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகை

    September 18, 2025
    மாநிலம்

    வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தியாகிகள் தினம்: தொண்டர்கள் புடைசூழ ராமதாஸ், அன்புமணி தனித்தனியே அஞ்சலி

    September 18, 2025
    மாநிலம்

    ஆபத்து விளைவிக்கும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்
    • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொதுவான குளிர் நிவாரணத்திற்கான துத்தநாக துணை: இந்த அத்தியாவசிய தாது குளிர்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா எச்சரிக்கை! பிரமாண்டமான 2025 FA22 சிறுகோள் FA22 பந்தயத்தை கடந்த பூமிக்கு 24,000 மைல் வேகத்தில் செப்டம்பர் 18; இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
    • பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ பைகிராஃப்ட்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.