Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?
    மாநிலம்

    ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர்.

    அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இணைந்து திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் மற்றும் சித்தனி, பார்ப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், கொள்ளுகாரன்குட்டை ஆகிய கிராமங்களில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    பின்னர் வயது மூப்பு காரணமாக, திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துடன், அஞ்சலி செலுத்துவதை ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திக் கொண்டார். அன்புமணி மட்டும் தொடர் பயணம் மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் பாமகவை தக்க வைத்துக்கொள்ள ராமதாஸும், பாமகவை கைப்பற்ற அன்புமணியும் கடந்த 9 மாதங்களாக மாபெரும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, பாட்டாளி சொந்தங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ராமதாஸ் இறங்கி உள்ளார். இதன் விளைவாக, தைலாபுரத்தில் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த நிறுவனர் ராமதாஸ், பின்னர், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகள் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய பாமக தலைவர் அன்புமணி.

    இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு, சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார். அவருடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதேபோல் திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் இவரும், சித்தணி முதல் கொள்ளுக்காரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதற்கிடையில், விழுப்புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    போக்குவரத்து பாதிப்பு: பாமகவில் அதிகாரத்தை கைப்பற்ற இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில், பரபஸ்பர பலத்தை நிருபிக்க தலா 100 கார்களில் தந்தையும், மகனும் அணிவகுத்தனர். நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு இளைஞர்கள் சென்றனர். இதன் எதிரொலியாக, விக்கிரவாண்டி – பண்ருட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் தொலைதூர பயணிகள் அவதிப்பட்டனர்.

    தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறிய நிறுவனர் ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவோம். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றார். திண்டிவனத்தில் பேசிய அன்புமணி, ‘வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசு, சமூக நீதிக்கு எதிரான துரோகி. திமுகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

    September 18, 2025
    மாநிலம்

    நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    September 18, 2025
    மாநிலம்

    டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 18, 2025
    மாநிலம்

    சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு

    September 18, 2025
    மாநிலம்

    அமைச்சராகி 50 நாளாச்சு… இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? – பிரேக் போடும் ரங்கசாமி… பேசாமல் இருக்கும் பாஜக!

    September 18, 2025
    மாநிலம்

    கோவை விமான நிலையத்தில் ‘பயணிகள் சேவை விழா’வில் நடிகர் ரஜினிகாந்த்!

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
    • மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியது
    • உங்கள் காலணிகள் ஒரு கழிப்பறை இருக்கையை விட அழுக்காகின்றன: நீங்கள் ஏன் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    • எளிய வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகளுடன் எடை இழப்புக்குப் பிறகு சருமத்தைத் தவிர்ப்பது எப்படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.