Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லி பிஎம்டபிள்யூ கார் விபத்து: கைதான பெண்ணுக்கு செப். 27 வரை நீதிமன்றக் காவல்
    தேசியம்

    டெல்லி பிஎம்டபிள்யூ கார் விபத்து: கைதான பெண்ணுக்கு செப். 27 வரை நீதிமன்றக் காவல்

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லி பிஎம்டபிள்யூ கார் விபத்து: கைதான பெண்ணுக்கு செப். 27 வரை நீதிமன்றக் காவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஎம்டபுள்யூ கார் விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ​​ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் அவர்களின் பைக் மீது பின்னால் இருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த நவ்ஜோத் சிங் உயிரிழந்தார், அவரின் மனைவி சந்தீப் கவுர் காயமடைந்தார்.

    இந்த விபத்து பற்றி நவ்ஜோத் சிங்கின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், “விபத்துக்குப் பிறகு, உடனடியாக சிகிச்சை பெறுவதற்காக என்னையும் எனது கணவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, விபத்தை ஏற்படுத்திய பெண் கார் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் அதனை மறுத்த அவர், விபத்து நடந்த இடத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள அவரின் உறவினரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து நவ்ஜோத் சிங்கின் மரணத்துக்கு காரணமாக பிஎம்டபுள்யூ காரை ஓட்டிவந்த பெண் ககன்ப்ரீத் கவுர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, “விபத்து வழக்கு ஒரு குற்றமற்ற கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி வழக்கைப் பதிவு செய்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் வேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக அவர் கருதினார். ஒரு பெண்ணாக இருந்தால், மரண தண்டனை வழக்குகளிலும்கூட ஜாமீன் வழங்கப்படலாம். விபத்து நடந்து 10 மணி நேரம் கழித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஒவ்வொரு ஆண்டும் 5,000 விபத்துகள் நடக்கின்றன, அவை அனைத்துமே துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி, ககன்ப்ரீத் கவுருக்கு ஜாமீன் வழங்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.

    மேலும், நவ்ஜோத் சிங்கின் இருசக்கர வாகனத்தை முதலில் மோதிய டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்து மற்றும் விபத்தின் போது நிற்காமல் சென்ற ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கவுரின் வழக்கறிஞர் கூறினார்.

    இதற்கு எதிர் வாதமாக, “விபத்து நடந்த இடத்திலிருந்து 19 கி.மீ தொலைவுக்கு காயமடைந்தவரை அழைத்துச் சென்று வடக்கு டெல்லியில் உள்ள நியூ லைஃப் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினருக்குச் சொந்தமானது.

    காயமடைந்த நவ்ஜோத் சிங்கின் மனைவி அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். காயமடைந்தவர் ஸ்ட்ரெச்சரில் இருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இது என்ன வகையான மருத்துவமனை?. அவரை இவ்வளவு தூரம் அழைத்துச் சென்றிருப்பதால், இதில் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் வினவினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மகாராஷ்டிராவில் என்கவுன்ட்டர்: பெண் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!

    September 17, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது: அமித் ஷா

    September 17, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி தாயாரின் ஏஐ வீடியோவை நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    தேசியம்

    ‘வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்’ – டெல்லி காற்று மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

    September 17, 2025
    தேசியம்

    21 மொழியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து: டெல்லி முதல்வர் வீடியோ வெளியிட்டார்

    September 17, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
    • கோவிட்: மனிதன் ஒரு புதிய பதிவை அமைத்துக்கொள்கிறான்: 2 ஆண்டு கோவிட் நோய்த்தொற்றின் போது ஓமிக்ரான் போல மாற்றப்பட்ட ஒரு நோயாளிக்குள் வைரஸ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?
    • கண் மிதவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததா? இது எதிர்காலத்தில் கடுமையான கண் நோயைக் குறிக்கிறதா?
    • “அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.