Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்
    உலகம்

    மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

    தோஹாவில் நடைபெற்ற அரபு – இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் எங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஆட்சேபனை இல்லை. ஆனால், இது இரு தரப்பு விவகாரம் என கூறி மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. கடந்த ஜூலை 25ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர், இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறுகிறது என தெரிவித்தார்.

    இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது. பேச்சுவார்த்தை மூலம் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண பாகிஸ்தான் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. அனைத்துத் தரப்பில் இருந்தும் நேர்மையும் தீவிரமும் இருந்தால், பேச்சுவார்த்தைதான் முன்னேற்றத்துக்கான சிறந்த வழி. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்படாது.

    தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது. இதற்கான போராட்டத்தில் பாகிஸ்தான் மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். இருந்தும், இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக நிறுத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. தண்ணீரை நிறுத்தும் எந்த ஒரு முயற்சியும் போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

    பாகிஸ்தானின் அணுசக்தி முற்றிலும் தற்காப்புக்காக மட்டுமே உள்ளது. அதைப் பயன்படுத்த எந்த நோக்கமும் இல்லை. அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை பாதிக்கப்பட்டால், அது தன்னை தற்காத்துக்கொள்ள எந்த விலையையும் கொடுக்கும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி.

    கத்தார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல், சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம், முஸ்லிம் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை. லெபனான், சிரியா, ஈரான் தற்போது கத்தார் ஆகிய நாடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதை ஏற்க முடியாது. அமெரிக்கா உடனும், எகிப்து உடனும் கத்தார் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அதை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி உள்ளது.

    57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவது தற்போது பொருத்தமானதாக இருக்காது. மாறாக, இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெளிவாகக் கூறும் செயல்திட்டமே தேவை.

    பாகிஸ்தான் எப்போதும் அமைதி, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, ஆக்கிரமிப்பும் நிற்கவில்லை என்றால் பயனுள்ள நடவடிக்கைகள் அவசியமாகிறது. இதில், பொருளாதாரத் தடைகள், சட்ட நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்புப் படையை உருவாக்குதல் உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நாங்கள் தொலைந்துவிட்டோம்’: இந்திய மூல தொழிலதிபர் பரம்ஜித் சிங், 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார், பனியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; குற்றம் கடந்த காலத்தில் பணம் செலுத்தாமல் சம்பள தொலைபேசியைப் பயன்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    சார்லி கிர்க் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படக் யூனிலீவரின் நிதித் தலைவர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    ‘விவரிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் …’: சக ஊழியர்களைத் தாக்கியதற்காக இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அமல் போஸ், ‘இது ஊர்சுற்றுவது மட்டுமே’ என்று போலீசாரிடம் கூறினார் – டைம்ஸ் ஆப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    September 16, 2025
    உலகம்

    இந்தியன் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டது: காங்கிரஸ்காரர் ரோ கன்னா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தெருக்களில் ‘சுதந்திரமாக இருக்கக்கூடாது’ என்று கூறுகிறார்; அவரது குற்றவியல் கடந்த காலத்தை மேற்கோள் காட்டுகிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்
    • சியா விதைகள் சுகாதார அபாயங்கள்: ஹார்வர்ட் டாக்டர் சியா விதைகளை சாப்பிடுவதற்கான மறைக்கப்பட்ட ஆபத்தை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” – ஜாய் கிரிசில்டா
    • ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு
    • ஒளிரும் சருமத்திற்கான குங்குமப்பூ: பிரகாசம், வடுக்கள் மற்றும் நிறமிக்கு இயற்கை DIY வைத்தியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.