Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
    தேசியம்

    இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்​சாப், டெல்​லி, உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கடந்த சில மாதங்​களாக பருவ மழை தீவிரமடைந்​துள்​ளது. இதனால் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் மலைப்​பாங்​கான பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

    இந்​நிலை​யில் இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம் தரம்​பூர் நகரில் நேற்று முன்​தினம் இரவு மேகவெடிப்பு காரண​மாக தொடங்​கிய கனமழை விடிய விடிய கொட்​டித் தீர்த்​தது. இதனால் தரம்​பூர் பேருந்து நிலை​யம் வெள்​ளத்​தில் மூழ்​கியது. சில பேருந்​துகள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பல பேருந்​துகள், கடைகள், நீரேற்று நிலை​யம் உள்​ளிட்​டவை சேதமடைந்​தன.

    இது​போல நிஹ்ரி பகு​தி​யில் உள்ள ஒரு குன்​றி​லிருந்து பாறை உருண்டு வந்து ஒரு வீட்​டின் மீது விழுந்​த​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 2 பேர் இடி​பாடு​களில் இருந்து மீட்​கப்​பட்​டனர். இந்த தகவலை மண்டி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சாக் ஷி வர்மா தெரி​வித்தார். சிம்லா அருகே ஏற்​பட்ட நிலச்​சரி​வில் பல வாக​னங்​கள் புதைந்​தன. இதனால் அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து துண்டிக்கப்பட்​டுள்​ளது.

    உத்​த​ராகண்​டின் டேராடூன் நகரிலும் நேற்று முன்​தினம் இரவு கனமழை கொட்​டியது. இதனால் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கால் ஓட்டல்​கள், கடைகள், வணிக வளாகங்​கள் சேதமடைந்​தன. வெள்​ளம் காரண​மாக சுஹாஸ்த்​ர​தாரா ஆறு கரைபுரண்டு ஓடு​கிறது. இதனால் சுஹாஸ்த்​ர​தாரா சாலை​யில் உள்ள ஓட்​டல்​கள், கடைகள் சேதமடைந்​துள்​ளன.

    வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி பார்​வை​யிட்​டார். பின்​னர் முதல்​வர் தாமி கூறும்​போது, “மாநில பேரிடர் மீட்​புப் படை​யினர் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக உள்​ளூர் நிர்​வாகத்தை அவ்​வப்​போது தொடர்பு கொண்டு நிலை​மையை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறேன்” என்​றார்.

    இதனிடையே, பிரதமர் நரேந்​திர மோடி​யும் உள் துறை அமைச்​சர் அமித் ஷாவும் உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு நிலை​மையை கேட்​டறிந்​தனர். மேலும் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்கு தேவை​யான உதவி​களை செய்ய மத்​திய அரசு தயா​ராக இருப்​ப​தாக அவர்​கள்​ தாமி​யிடம்​ உறு​தி அளித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது: பிரதமர் மோடி

    September 17, 2025
    தேசியம்

    இந்தியா – பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்

    September 17, 2025
    தேசியம்

    20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும்

    September 17, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

    September 17, 2025
    தேசியம்

    வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி

    September 17, 2025
    தேசியம்

    அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு
    • வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் பெற்றோர்களில் பெரும் சதவீதம் குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகளை நிராகரிக்கிறது, மேலும் காரணங்கள் கவலைப்படுகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது: பிரதமர் மோடி
    • 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்
    • யார் வலியை மோசமாக உணர்கிறார்கள், ஆண்கள் அல்லது பெண்கள்: பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.