Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி
    மாநிலம்

    தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி​யில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.2,885 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​து, தெற்​காசி​யா​விலேயே முன்​னேறிய மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்​கிக் காட்​டு​வேன் என்று கூறி​னார்.

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.270.75 கோடி​யில் 193 நிறைவடைந்த பணி​களை தொடங்​கி​வைத்​தும், ரூ.562.14 கோடி​யில் 1,114 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், 2,23,013 பயனாளி​களுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இவ்​விழா​வில் 85,711 பேருக்கு இலவச வீட்​டுமனைப் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

    இது​போன்ற திட்​டங்​களை​யும், பணி​களை​யும் தாங்​கிக்​கொள்ள முடி​யாத எதிர்க்​கட்​சிகள் ஆக்​கப்​பூர்​வ​மான விமர்​சனத்தை முன்​வைக்க முடி​யாமல், திமுக தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவறான தகவலைக் கூறிக் கொண்​டிருக்​கின்​றனர். திமுக அளித்த 505 வாக்​குறு​தி​களில் 364 வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. 40 அறி​விப்​பு​கள் அரசின் பரிசீலனை​யில் உள்​ளன. மொத்​தம் 404 வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. மத்​திய அரசின் பரிசீலனை​யில் 37 திட்​டங்​களும், நிதி​யில்​லாமல் 64 திட்​டங்​களும் நிலு​வை​யில் உள்​ளன.

    தேர்​தலில் சொல்​லாத காலை உணவுத் திட்​டம், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன், நான் முதல்​வன், மக்​களைத் தேடி மருத்​து​வம், இன்​னு​யிர் காப்​போம் – நம்​மைக் காக்​கும் 48 உள்​ளிட்ட திட்​டங்​களை​யும் செயல்​படுத்தி இருக்​கிறோம். இந்​தி​யா​வுக்கே முன்​னோடி மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. இதையெல்​லாம் மறைத்​து, பொய்​களைப் பரப்பி சிலர் மலி​வான அரசி​யல் செய்​கின்​றனர்.

    நீட் விலக்கு உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை இப்​போதைக்கு எங்​களால் நிறைவேற்ற முடிய​வில்​லை. மக்​களுக்கு எதி​ரான மத்​திய பாஜக ஆட்சி நெடு​நாள் நீடிக்​காது. நிச்​ச​யம் ஒரு​நாள் நம் மாநிலத்​துக்​கான உரிமை​களைப் பாது​காக்​கும் ஆட்சி அமை​யும். தமிழகத்தை நிச்​ச​யம் தெற்​காசி​யா​விலேயே முன்​னேறிய மாநில​மாக உரு​வாக்​கிக் காட்​டு​வேன்.

    அவதூறு, பொய், வீண்​பழிகளைப் பற்​றியெல்​லாம் நான் கவலைப்​படக்​கூடிய​வன் அல்ல. 50 ஆண்​டு​களாக இவற்​றைப் பார்த்​துக் கொண்​டு​தான் இருக்​கிறேன். 2026 தேர்​தலிலும் நிச்​ச​யம் திமுக வெற்றி பெறும். காலமெல்​லாம் மக்​களாட்சி தொடரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    விழா​வில், மாவட்ட ஆட்​சி​யர் ச.தினேஷ்கு​மார், அமைச்​சர் அர.சக்​கர​பாணி, எம்​எல்​ஏ-க்​கள் மதி​யழகன், ராமச்​சந்​திரன், பிர​காஷ், எம்​.பி. கோபி​நாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். முன்​ன​தாக, கிருஷ்ணகிரி-பெங்​களூரு சாலை​யில் நடை​பெற்ற ரோடு ஷோவில் பங்​கேற்ற முதல்​வர், மாற்​றுத் திற​னாளி​கள், பொது​மக்​களிட​மிருந்து கோரிக்கை மனுக்​களை பெற்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    மாநிலம்

    கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

    September 17, 2025
    மாநிலம்

    கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

    September 17, 2025
    மாநிலம்

    தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? – என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

    September 17, 2025
    மாநிலம்

    செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

    September 17, 2025
    மாநிலம்

    ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
    • இளைஞர்களில் நுரையீரல் புற்றுநோய் உயரும் – காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு மற்றும் புகைப்பிடிப்பவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் – இந்தியாவின் டைம்ஸ்
    • ‘நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்’ – ட்ரம்ப் நெகிழ்ச்சி
    • கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு
    • சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.