Last Updated : 16 Sep, 2025 08:33 AM
Published : 16 Sep 2025 08:33 AM
Last Updated : 16 Sep 2025 08:33 AM

குவாஹாட்டி: அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள என்ஐடி-யில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) உதவித்தொகையின் கீழ் வங்கதேச மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம் ஆண்டு படிக்கும் வங்கதேச மாணவர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இவர்களில் படுகாயம் அடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை தொடர்பாக வங்கதேச மாணவர்கள் 5 பேரை என்ஐடி அதிகாரிகள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த மாணவர்களை கடந்த வாரம் விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் இவர்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!