Last Updated : 16 Sep, 2025 09:05 AM
Published : 16 Sep 2025 09:05 AM
Last Updated : 16 Sep 2025 09:05 AM

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து போலீஸார் சாலைகளில் நின்று, அபராதத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்தினால் 50% தள்ளுபடி என போலீஸார் அறிவித்தனர்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் தாமாக முன்வந்து ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி வரை 37 லட்சத்து 86 ஆயிரத்து 173 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் தொடர்பாக ரூ.106 கோடி அபராதமாக செலுத்தினர். இறுதி நாளான செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் ரூ.25 கோடி அபராதம் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US