Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியே தொடர்வார்: வழக்கறிஞர் பாலு தகவல்
    மாநிலம்

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியே தொடர்வார்: வழக்கறிஞர் பாலு தகவல்

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியே தொடர்வார்: வழக்கறிஞர் பாலு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார்.

    இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​குழுவை அங்​கீகரித்து இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடிதம் வழங்​கி​யுள்​ளது.

    அந்​தக் கடிதத்​தில் பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணி தொடர்வார். அதே​போல், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வரை கட்​சி​யின் தலை​வ​ராக அன்​புமணி​யும், பொதுச்​செய​லா​ள​ராக வடிவேல் ராவணனும், பொருளாள​ராக தில​க​பாமா உட்பட ஏனைய நிர்​வாகி​களும் அப்​படியே தொடர்​கிறார்​கள் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    பாமக நிறு​வனர் ராம​தாஸ் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே​நேரத்​தில் கட்​சி​யில் அன்​புமணியை ஏற்று கொண்​ட​வர்​கள் மட்​டும்​தான், கட்​சி​யினுடைய கொடி, சின்​னத்தை பயன்​படுத்த முடி​யும் மற்​றவர்​கள் பயன்​படுத்த கூடாது. ராம​தாஸ் லட்​சி​யங்​களை​யும், நோக்​கங்​களை​யும் அன்​புமணி தலை​மை​யில் நிறைவேற்​று​வோம். பாமக​வில் தனித்​தனி அணி​கள் எது​வும் கிடை​யாது.

    ஒரே அணி தான். அன்​புமணி தலை​மையி​லான நிர்​வாகி​கள் மட்​டும்​தான் பாமகவைச் சேர்ந்​தவர்​கள். சிறு குழப்​பத்​தின் காரண​மாக இரண்டு அணி​களாக செயல்​பட்டு வந்​தனர். இந்த கடிதத்​தின் மூல​மாக அவர்​களுக்​கும் அழைப்பு விடுக்​கிறோம். பாமகவை மேலும் வலிமை​யாக்க, ஒதுங்கி இருப்​பவர்​கள், விலகி நிற்​பவர்​கள் அன்​புமணி​யின் தலை​மையை ஏற்று இந்த பக்​கம் வரவேண்​டும்.

    கட்​சி​யின் கொடி, சின்​னத்தை அன்​புமணி தலை​மையி​லான நிர்​வாகி​கள் மட்​டும்​தான் பயன்​படுத்த வேண்​டும். கட்​சிக்கு சம்​பந்​தம் இல்​லாத மற்​றவர்​கள் பயன்​படுத்​து​வது தவறு. பாமக தற்​போது கட்சி அங்​கீ​காரத்தை இழந்திருக்​கிறது. தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் வழங்க அதி​காரம் இருக்​கிறது. அந்த அடிப்​படை​யிலே தான் சின்​னத்​தை​யும், இந்த அங்​கீ​கார கடிதத்​தை​யும் வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    கடிதத்​தில் அன்​புமணி பெயர் இல்லை: எம்​எல்ஏ அருள் விளக்கம்

    சேலம்: சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பாமக எம்எல்ஏ அருள் கூறிய​தாவது: தேர்​தல் கமிஷனிடம் இருந்து கடிதம் வந்​துள்​ள​தாக வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார். அதில் மாம்​பழம் சின்​னத்தை பாமக​வுக்கு கொடுத்​துள்​ளது என்று அந்த கடிதத்​தில் உள்​ள​தாக​வும் காண்​பித்து இருக்​கிறார். பாமக அலு​வலக முகவரியை, ராம​தாசுக்கு தெரி​யாமல் மாற்றி கொடுத்து தேர்​தல் ஆணைய கடிதத்​தைப் பெற்​றுள்​ளனர்.

    அந்த கடிதத்​தில், அன்​புமணி தான், பாமக​வின் தலை​வர் என்று எந்த இடத்​தி​லும் குறிப்​பிடப்​பட​வில்​லை. பாமக தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​ப​டாத, பதிவு செய்​யப்​பட்ட கட்​சி. அதன்​படி, தொடர்ந்​து, தேர்​தலில் போட்​டி​யிட்​டு, 2% வாக்​கு​களை பெறும் கட்​சிக்கு தேர்​தல் ஆணை​யம் ஒரே சின்​னத்தை தொடர்ந்து வழங்​கும். அந்த அடிப்​படை​யில் தற்​போதும் மாம்பழச் சின்​னத்தை தேர்​தல் ஆணை​யம் வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன்

    September 16, 2025
    மாநிலம்

    ஜவுளி நிறுவனத்தில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

    September 16, 2025
    மாநிலம்

    தமிழக பாஜக அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமனம்

    September 16, 2025
    மாநிலம்

    மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

    September 16, 2025
    மாநிலம்

    திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
    • “பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன்
    • சுவர் அமர்ந்திருக்கும் நன்மைகள்: குறைந்த சகிப்புத்தன்மை முதல் நீடித்த சக்தி வரை: உங்கள் உடற்பயிற்சி வழக்கத்திற்கு “சுவர் அமர்வுகளை” சேர்க்க 6 காரணங்கள்
    • பிஹாரை அடுத்து டெல்லியிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்!
    • ஜவுளி நிறுவனத்தில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.