Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    மாநிலம்

    ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சென்னையில் நேற்று பொது சுகாதாரத் துறையில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத் துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் 15, ஆய்வக தொழில்நுட்புநர் நிலை-2-க்கு 3 என மொத்தம் 18 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    42 ஆய்வக தொழில் நுட்புநர்களுக்கு பணிவரன்முறை ஆணைகள் தரப்பட்டுள்ளன. வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 33,987 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் 43,755 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் ஆணை தரப்பட்டுள்ளன. வரும் 22-ம் தேதி 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் வழங்கவுள்ளார். மீதமுள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் குறுகிய காலத்துக்கான எக்ஸ்ரே எடுத்து, அதனை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்ததில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோயை தொடக்க கட்டத்தில் கண்டறிய மேமோகிராம் பரிசோதனை சிறிய அளவிலான செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சோதனை அடிப்படையில்… சென்னை – ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, பெரியார் அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுப்படுத்த துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கொண்ட நிபுணர்கள் ஆராய்ந்து அதுகுறித்த அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்திலுள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: செங்கோட்டையன் கருத்து

    September 16, 2025
    மாநிலம்

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியே தொடர்வார்: வழக்கறிஞர் பாலு தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார்

    September 16, 2025
    மாநிலம்

    மாநில செயலாளர் எனும் மாபெரும் பொறுப்பு: வாழ்த்திய தலைவர்களுக்கு மு.வீரபாண்டியன் நன்றி

    September 16, 2025
    மாநிலம்

    16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

    September 16, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? – பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
    • உணவு முடிந்த உடனேயே உட்கார்ந்திருக்கிறீர்களா? திடீர் மாரடைப்புக்கு இது மிகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத காரணியாக இருக்கலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஞ்ஞானிகள் ஜாக்சன் பொல்லக்கின் ஓவியங்களில் ஒன்றில் ஒரு மர்ம நிறத்தை அடையாளம் காண்கின்றனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது: சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கொள்கை என்ற புகாருக்கு கட்கரி மறுப்பு
    • ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மீலாதுன் நபி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.