Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்
    தேசியம்

    கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பெனடிக்ட் மென்னி உளவியல் – சமூக மறுவாழ்வு மையம். அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராகி எனும் பெண் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மரண படுக்கையில் இருந்தபோது தனது கடைசி ஆசையை சொல்லி உள்ளார்.

    இந்து முறைப்படி தனக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட வேண்டுமென அவர் சொல்லி உள்ளார். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தனது உறவினர்கள் மற்றும் சொந்த ஊர் உள்ளிட்டவை நினைவில் இல்லை.

    இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த மையத்தை கன்னியாஸ்திரிகள் பராமரித்து வந்தனர். அவர்கள் சிட்டாட்டுமுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி உள்ளனர். இது குறித்து அறிந்த சஃபீர், உயிரிழந்த அந்த பெண்ணின் கடைசி ஆசைப்படி, அவருக்கு மகன் ஸ்தானத்தில் முன்னின்று இறுதி சடங்குகளை இந்து முறைப்படி சஃபீர் செய்துள்ளார்.

    “உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை கண்டுபிடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் யாரேனும் ஒருவர் தனது கடைசி ஆசையை சொல்லும் போது, ​​நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அதைதான் எனது மதம் எனக்கு போதித்துள்ளது. எனது வார்டில் அனைத்து மத சமூகத்தை சேர்ந்த மக்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் இன்னும் பிற செயல்பாடுகளில் நான் அடிக்கடி பங்கேற்பதால், அந்த சடங்குகள் குறித்து எனக்கு ஓரளவு பரிச்சயம்.

    அதோடு தகனக் கூடத்தில் இருந்தவரும் எனக்கு வழிகாட்டினார். இந்த சடங்குகளை மேற்கொள்ள எனது மதம் எனக்கு தடையாக இல்லை. உள்ளூர் ஜமாத்தின் இமாம் என்னை வாழ்த்தினார். இது சரியான செயல் என்று அவர் கூறினார்”என்று சஃபீர் கூறியுள்ளார்.

    கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பும் இதே போல உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளார் சஃபீர். இந்நிலையில், அவரது செயல் குறித்து அறிந்த கேரள நெட்டிசன்கள் ‘தி ரியல் கேரளா ஸ்டோரி’ என புகழ்ந்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    September 15, 2025
    தேசியம்

    கேரளாவில் அமீபா தொற்றுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு

    September 15, 2025
    தேசியம்

    ‘கெஞ்சியும் கேட்கவில்லை…’ – டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரி மனைவி வாக்குமூலம்

    September 15, 2025
    தேசியம்

    Bihar SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அக்.7-ல் இறுதி விசாரணை

    September 15, 2025
    தேசியம்

    உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள வக்பு சட்ட விதிகள் குறித்து அரசு ஆராயும்: கிரண் ரிஜிஜு

    September 15, 2025
    தேசியம்

    ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245 மி.மீ மழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    • திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு
    • மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    • கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.