Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து
    மாநிலம்

    வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்காது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அரசு மனநல மருத்​து​வ​மனை சார்​பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை​யில் நேற்று நடந்த “உலக தற்​கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், தற்​கொலை தடுப்பு விழிப்​புணர்வு உறுதி மொழியை ஏற்​றார். பின்​னர் துண்டு பிரசுரம் விநி​யோகித்​து, விழிப்​புணர்வு பதாகை ஏந்தி மனித சங்​கிலி நிகழ்​வில் பங்​கேற்​றார்.

    இதில் மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, பொதுசு​கா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை – மருத்​துவ கல்​லூரி டீன் சாந்​தா​ராம், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன், மருத்​து​வர் பூர்ண சந்​திரிகா மற்​றும் மருத்​து​வர்​கள், செவிலிய மாணவர்​கள் கலந்து கொண்​டனர்.

    அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த 2001-ம் ஆண்டு அதிக தற்​கொலைகள் நிகழ்ந்​திருக்​கும் ஆண்​டாக இருந்​தது. இதனை தடுக்​கும் வித​மாக சாணிப்​பவுடருக்கு தடை, எலி மருந்து விற்​பனைக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

    தமிழகம் முழு​வதும் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மனம் என்​கின்ற மனநல மருத்​துவ சேவை​கள் அமைப்​பு​கள் தொடங்​கப்​பட்டு மருத்​து​வம், பொறி​யியல் மற்​றும் கலைக்​கல்​லூரி மாணவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் பணி நடை​பெற்று வரு​கிறது. தற்​கொலை​யோடு சேர்த்​து, போதை தடுப்பு விழிப்​புணர்​வு, போதைக்கு எதி​ரான விழிப்​புணர்வு அமைப்​பு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

    வாக்​குறு​தி​கள் இன்​னும் நிறைவேற்​ற​வில்லை என்று தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்​காது. மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் 1.15 கோடி பேர் மகிழ்ச்​சி​யோடு பயன்​பெற்று வரு​கிறார்​கள். தினந்​தோறும் 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விடியல் பயணம் மூலம் பயன்​பெறுகின்​றனர்.

    புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டங்​களால் மாதம் ரூ.1,000 உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​தி​யா​வில் உயர்​கல்விக்கு செல்​பவர்​களின் எண்​ணிக்கை 29 சதவீத​மாக உயர்ந்​திருக்​கும் நிலை​யில், தமிழகத்​தில் மட்​டும் 53 சதவீத​மாக உள்​ளது. விஜய் போன்​றவர்​கள் எல்​லாம் இதையெல்​லாம் மறக்கக் கூடாது.

    பொருளா​தார வளர்ச்சி பட்​டியலில் குஜ​ராத், கோவா உள்​ளிட்ட 6 மாநிலங்​கள் இடம் பெறவே இல்​லை. இந்​தியா முழு​மைக்​கும் பொருளா​தார வளர்ச்சி என்​பது 6.5 சதவீதம். தமிழகத்​தின் பொருளா​தார வளர்ச்சி என்​பது 11.19 சதவீதம் ஆகும். விஜய் போன்​றவர்​கள் இதுகுறித்து படித்து தெரிந்​து கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு

    September 16, 2025
    மாநிலம்

    மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    September 16, 2025
    மாநிலம்

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    September 16, 2025
    மாநிலம்

    இந்த முறை திமுக நிக்கணும்… திண்டுக்கல் சீனிவாசனுக்கு திகில் கொடுக்கும் திமுக!

    September 16, 2025
    மாநிலம்

    வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

    September 16, 2025
    மாநிலம்

    நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு
    • மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    • கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்
    • உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.