புதுடெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிவசேனா (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், “தீவிரவாதத்தை வளர்க்கும் ஒரு நாட்டுடனான கிரிக்கெட் போட்டி தொடர்பாக மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ராணே நேற்று கூறும்போது, ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை ஆதித்ய தாக்கரே விமர்சனம் செய்தாலும் அவர் ரகசியமாக, பர்தா அணிந்து பார்ப்பார்’’ என்று கிண்டல் செய்தார்.