Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
    மாநிலம்

    கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    adminBy adminSeptember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை தெரிவிக்​கும் அரசு மருத்​து​வர் மீது துறைரீதி​யாக மட்​டுமின்​றி, காவல் துறை மூல​மாக​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

    மாதவரம் புனித அன்​னாள் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி வளாகத்​தில் `நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாம் நேற்று நடந்​தது. இந்த முகாமில் மக்​களுக்​கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்​றும் ஆய்​வகப் பரிசோதனை​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பார்​வை​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வச் சான்​றிதழினை வழங்​கி​னார்.

    மாதவரம் எம்​எல்ஏ சுதர்​சனம், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி ஆகியோர் உடன் இருந்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: முதல்​வர் ஸ்​டா​லின் கடந்த ஆக. 2-ம் தேதி நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இந்த திட்​டத்​தில் 17 வகை​யான சிறப்பு மருத்​துவ சேவை​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது 6-வது வார​மாக தமிழகம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

    ஒவ்​வொரு வார​மும் சனிக்​கிழமை காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை முகாம் நடை​பெறுகிறது. இது​வரை 5 வாரங்​களாக 185 முகாம்​கள் நடத்​தப்​பட்​ட​தில் 2,60,910 பேர் பயன் பெற்​றுள்​ளனர். கடந்த இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு மருத்​து​வர் நடத்தி வரும் ஸ்கேன் சென்​டரில், கரு​வில் உள்ள சிசு பாலினம் தெரி​வித்த புகார் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதே​போல, சேலம் பகு​தி​யில் ஒரு ரேடி​யாலாஜி மருத்​து​வர் கரு​வில் உள்ள பாலினம் குறித்து தெரி​வித்​த​தாக புகார் வந்​தது. அவர் மீது துறைரீதி​யாக நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டு, காவல் துறை​யிலும் புகார் தரப்​பட்​டுள்​ளது. சம்​மந்​தப்​பட்​ட​வர்​கள் மீது சட்டரீதி​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

    இதுபோன்ற செயல்​கள் செய்​யக்​கூ​டாது. இது மனி​தாபி​மானமற்ற செயல். தமிழகத்​தில் ஆண் குழந்​தை​யாக இருந்​தா​லும்,பெண் குழந்​தை​யாக இருந்தா​லும்இரண்​டும் சமம் என்ற வகை​யில்பாவிக்​கப்​பட்டு வருகிறது. கரு​வில்உள்ள பாலினத்தை தெரிவிக்​கக்கூடாது என்​பது தொடர்பாக அரசுபல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அரசு மருத்​து​வர்​கள் இந்த மாதிரி​யாக செயல்​களை செய்​வதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. அரசு ஊழி​யராக இருந்​தால், விதி​முறை​களின்​படி துறைரீதி​யான நடவடிக்​கை, சட்ட நடவடிக்​கை, காவல் துறை நடவடிக்கை மட்​டுமே மேற்​கொள்​ளப்​படும். சொத்​துகள் முடக்​கு​வது என்​பது போன்​ற நடவடிக்​கைகள்​ எல்​லாம்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    September 14, 2025
    மாநிலம்

    இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

    September 14, 2025
    மாநிலம்

    சிம்பொனிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன்: தமிழக அரசு பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கம்

    September 14, 2025
    மாநிலம்

    பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

    September 14, 2025
    மாநிலம்

    தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
    • ​​​​​​​பிஹாரில் ரூ.27,000 கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி: அதானி பவர் நிறுவனம் தகவல்
    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு
    • ​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்
    • துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.