Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»பார்க்க சிறுசி… விலையோ பெருசு… கிலோ ரூ.200 ஆக உயர்ந்த சீரக சம்பா அரிசி விலை!
    வணிகம்

    பார்க்க சிறுசி… விலையோ பெருசு… கிலோ ரூ.200 ஆக உயர்ந்த சீரக சம்பா அரிசி விலை!

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பார்க்க சிறுசி… விலையோ பெருசு… கிலோ ரூ.200 ஆக உயர்ந்த சீரக சம்பா அரிசி விலை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பிரியாணிக்கு மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சன்ன ரக சீரக சம்பா அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.200-ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் மிகப் பெரும் பாலானோர் நமது பாரம்பரிய அரிசி ரகங்களில் ஒன்றான சீரக சம்பா அரிசியை பிரியாணி சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். சம்பா பருவத்தில் பயிரிடப்படும் இந்த அரிசி, மருத்துவ பண்புகளும், நல்ல சுவையும் கொண்டது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பரவலாகபயிரிடப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டி பகுதியில் விளையும் சீரக சம்பா அரிசி ரகம், பிரியாணியின் சுவையையும், நறுமணத்தையும் அதிகரித்துக் கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளதால் மவுசு அதிகம்.

    சம்பா பருவத்தில் மட்டுமே பயிரிடப்படக் கூடிய இந்த நெல் ரகத்தின் அறுவடைக் காலம் நான்கரை மாதங்கள். இதர ரக நெல்லை விட மகசூல் பாதியாக இருப்பதாலும், உற்பத்தி செலவு காரணமாகவும் விலை எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கும்.

    இந்நிலையில் சீரக சம்பா அரிசியின் விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து திருச்சி மாவட்ட அரிசி வியாபாரிகள் கூறியது: தமிழக மக்களிடம் பிரியாணிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், சீரக சம்பா அரிசியின் தேவையும், விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் கடந்த சில ஆண்டுகளாக சீரக சம்பா அரிசியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    இதனால் கடந்த ஆண்டு வரத்து அதிகரித்து கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது. இந்த விலை சீரக சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகவில்லை. இதனால், முந்தைய ஆண்டுகளில் சீரக சம்பா பயிரிடுவதில் ஆர்வம் காட்டிய விவசாயிகள், கடந்த ஆண்டு சீரக சம்பா நெல்ரகத்தை பயிரிடவில்லை. இதனால், நிகழாண்டு சீரக சம்பா ரகம் உற்பத்தி, வரத்து குறைந்து சந்தையில் டிமாண்ட் உருவாகி, கடந்தசில நாட்களாக கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது.

    இதனால் சாமானிய மக்கள், சீரக சம்பா அரிசிக்கு மாற்றாக விலை குறைந்த மற்றொரு சன்ன ரக அரிசியான கிலோ ரூ.80-க்கு விற்பனையாகும் துளசி ரக அரிசியை பிரியாணி சமைக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டு பரவலாக விவசாயிகள் பலரும் சீரக சம்பா நெல் பயிரிட்டுள்ளனர்.

    இது, ஜனவரி மாதம் அரிசியாகி சந்தைக்கு விற்பனைக்கு வரும். அதன்பிறகு விலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் சீரக சம்பா நெல் அறுவடை, நவம்பர் மாதம் தொடங்கிவிடும். அப்போது அங்கிருந்தும் தமிழகத்துக்கு அரிசி வரத் தொடங்கும்போது, தமிழகத்தில் சீரக சம்பா அரிசி விலை குறையத் தொடங்கிவிடும் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சற்றே குறைந்த தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்தது

    September 13, 2025
    வணிகம்

    பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு

    September 13, 2025
    வணிகம்

    நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பத்திரிகைகளின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு

    September 13, 2025
    வணிகம்

    ஒரு பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது – நகை வியாபாரிகள் சொல்வது என்ன?

    September 13, 2025
    வணிகம்

    தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை… இப்போது முதலீடு செய்வது சரியா? – ஒரு தெளிவுப் பார்வை

    September 12, 2025
    வணிகம்

    சீனாவில் இருந்து கழிவுநீர் வடிகால் ‘பம்ப்செட்’ இறக்குமதி – உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
    • 8 நாடுகளையும், பில்லியன் கணக்கான உயிரினங்களையும் இணைக்கும் காடு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மணிப்பூரில் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருந்தது கேலிக்கூத்து: கார்கே விமர்சனம்
    • இளம் பெண்களில் கருவுறாமைக்கு மிகவும் பொதுவான காரணங்களில் பி.சி.ஓ.எஸ் ஏன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.