லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைபிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, இங்கிலாந்தின் ஆலிஸ் பம்ப்ரேவை எதிர்த்து விளையாடினார்.
இதில் மினாக்ஷி ஹூடா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால் பதித்தார். இதன் மூலம் அவர், குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார்.