Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் 
    மாநிலம்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் 

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும் இன்று ஒரு​நாள் தற்​செயல் விடுப்பு போராட்​டத்​தில் ஈடு​பட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்​பாக சிபிஎஸ் (பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம்) ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​கள் எஸ்​.ஜெய​ராஜ ராஜேஸ்​வரன், பி.பிரெட்​ரிக் எங்​கெல்​ஸ், மு.செல்​வகு​மார் ஆகியோர் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது, திமுக தனது தேர்​தல் அறிக்​கை​யில் (எண் 309) அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​தது.

    ஆனால், ஆட்சி பொறுப்​பேற்று 4 ஆண்​டு​களுக்கு மேல் ஆகி​யும் திமுக அரசு இன்​னும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​த​வில்​லை. தமிழகத்​தை​விட நிதி வரு​வா​யில் பின்​தங்​கிய மேற்கு வங்​கம் உள்பட 5 மாநிலங்​களில் பழைய ஓய்​வூ​திய திட்​டமே தற்​போதும் அமலில் உள்​ளது. தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி, பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை கொள்​கைரீ​தி​யாக அமல்​படுத்​து​வதற்கு மாறாக தமிழக அரசு, அலு​வலர் குழுவை நியமித்​துள்​ளது.

    தமிழக நிதித்​துறை​யின் விருப்​பத்​தையே அலு​வலர் குழு, அரசுக்கு அறிக்​கை​யாக வழங்​கும் என்​பது கடந்த கால அனுபவம். பழைய ஓய்​வூ​திய திட்ட கோரிக்​கையை வலி​யுறுத்தி 2026-ம் ஆண்டு ஜனவரி​யில் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடுபட திட்​ட​மிட்​டுள்​ளோம்.

    அதற்கு முன்​த​யாரிப்​பாக செப்​.11-ம் தேதி (இன்​று) ஒரு​நாள் தற்​செயல் விடுப்பு போராட்​டம் நடை​பெறுகிறது. அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் தன் உணர்​வுடன் இந்த போராட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும். தமிழக அரசும் தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை உடனே அமல்​படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​யுள்​ளனர்​.

    வரு​கைப்​ப​திவு விவரம்: இதற்​கிடையே, தமிழக அரசின் தலை​மைச் செயலர் ந.முரு​கானந்​தம் அனைத்து துறை​களின் செயலர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: குறிப்​பிட்ட கோரிக்​கையை வலி​யுறுத்தி செப். 11-ம் தேதி அன்று ஒட்​டுமொத்​த​மாக தற்​செயல் விடுப்பு எடுக்க அரசு ஊழியர்​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர். தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்க அங்​கீ​கார விதி​முறை​யின்​படி, எந்த ஒரு சங்​க​மும் அதன் உறுப்​பினர்​களை ஒட்​டுமொத்​த​மாக தற்​செயல் விடுப்பு எடுக்​கச் சொல்ல முடி​யாது.

    அனைத்து துறை​களின் செயலர்​களும் தங்​கள் அதி​காரத்​துக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் வியாழக்​கிழமை காலை 10.15 மணிக்​குள் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரங்​களை தவறாமல் தெரிவிக்க வேண்​டும். அதன் நகலை மனிதவள மேலாண்​மைத் துறைக்கு மின்​னஞ்​சல் வாயி​லாக அனுப்ப வேண்​டும்.

    அதே​போல் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் தங்​கள் நிர்​வாக வரம்​புக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரங்​களை வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் அலு​வல​கம் வாயி​லாக அரசுக்கு தெரிவிக்க வேண்​டும். அதன் நகலை மனிதவள மேலாண்​மைத் துறைக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “பெரியார், காமராஜர் பற்றி விஜய்க்கு 10 நிமிடம் பேசத் தெரியுமா?” – சீமான்

    September 13, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    September 13, 2025
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    September 13, 2025
    மாநிலம்

    ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

    September 13, 2025
    மாநிலம்

    கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம்

    September 13, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா!

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
    • “பெரியார், காமராஜர் பற்றி விஜய்க்கு 10 நிமிடம் பேசத் தெரியுமா?” – சீமான்
    • பிளாக்பிங்கின் லிசா – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போல அலங்கரிக்க 5 தந்திரங்கள்
    • தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்
    • திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.