Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!
    உலகம்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!

    adminBy adminSeptember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெக்சாஸ்: செப்டம்பர் 10 ஆம் தேதி டல்லாஸ் மோட்டலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா எனும் நபர், வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    டெக்சாஸின் டெனிசன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் இன்டர்ஸ்டேட் 30 இல் அமைந்துள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டல்லாஸ் காவல்துறையினர் யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் என்பவரை கைது செய்தனர். அவர் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின்படி, நாகமல்லையா, மோட்டல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​கோபோஸ்-மார்டினெஸ் மற்றும் அவருடன் வந்த பெண் சக ஊழியரை அணுகினார். ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாகமல்லையா அவர்களிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமடைந்த கோபோஸ்-மார்டினெஸ் மோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் நாகமல்லையா துரத்தி சென்று கத்தியால் குத்தினார். நாகமல்லையாவின் மனைவியும் மகனும் வெளியே ஓடி வந்து தடுக்க முயன்றபோதும், அவர்களை தள்ளிவிட்டு கடுமையாக தாக்கினார். இதன்பின்னர் அவரின் தலையை துண்டித்து, உதைத்து தள்ளி குப்பைத் தொட்டியில் வீசினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

    காவல்துறையினரின் தகவல்களின்படி, நாகமல்லையாவைக் கொல்ல கோபோஸ்-மார்டினெஸ் கத்தியைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,‘டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தனது பணியிடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகமல்லையாவின் துயர மரணத்திற்கு ஹூஸ்டன் இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் டல்லாஸ் காவல்துறையின் காவலில் உள்ளார். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளி பிபிசி குழு உறுப்பினர் ஷுமீத் பானர்ஜி ராஜினாமா செய்தார், ‘ஆட்சி சிக்கல்களை’ மேற்கோள் காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

    December 1, 2025
    உலகம்

    பாஸ்டனில் விமானத்தின் நடுவே போர்க்கால் இரண்டு வாலிபர்களை குத்திய இந்திய மாணவர் மீது குற்றச்சாட்டு; 10 ஆண்டுகள் வரை, $250,000 அபராதம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

    December 1, 2025
    உலகம்

    நிக்கோலஸ் சிங் கைது: கனடாவின் ‘மோஸ்ட் வான்டட்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 18 மாதங்களுக்குப் பிறகு கைது; துப்பாக்கி, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட்பாட்’ குளியல்

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு
    • சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்
    • முட்டையின் வெள்ளைக்கரு உண்மையில் தீக்காயங்களை ஆற்றுமா? கொடிய தொற்று அபாயம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி பிபிசி குழு உறுப்பினர் ஷுமீத் பானர்ஜி ராஜினாமா செய்தார், ‘ஆட்சி சிக்கல்களை’ மேற்கோள் காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.