உடுமலை: கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளத்தில் அவர் பேசியதாவது: ஆனைமலை ஆறு – நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை. தமிழகத்தை ஆளும் திமுகவும், கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. எனவே, கேரள அரசிடம் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வேண்டும்.
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் திமுக துரோகம் இழைத்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் 26,000 குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மணமகளுக்கு பட்டுச்சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஏழை மாணவர்கள் கல்விக்காக ரூ.7,200 கோடியில் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டமும், மடத்துக்குளம் தொகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான அப்பர் அமராவதி அணை திட்டமும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.