Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
    தேசியம்

    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

    adminBy adminSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.

    நேற்று முன் தினம் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 பேர் வாக்களித்தனர், இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை. 15 வாக்குகள் செல்லாதவை. இதில் 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. இந்த தேர்தலில் 7 பிஜேடி எம்.பி.க்கள், 4 பிஆர்எஸ் எம்.பி.க்கள், 1 சிரோமணி அகாலி தளம் எம்.பி. மற்றும் 2 சுயேச்சை எம்.பி.க்கள் உட்பட 14 பேர் வாக்களிக்கவில்லை.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டிக்கு குறைந்தது 315 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர். ஒரு மதிப்பீட்டின்படி, ஆறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் கட்சி மாறி வாக்களிப்பது அல்லது செல்லாத வாக்குகள் ஆக்கப்பட்டன.

    “தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குகள் அவர்களின் பலத்தை விட எவ்வாறு அதிகரித்தன. எங்களுக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது பற்றி நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். மூன்று சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) வாக்குகள், 4 ஆம் ஆத்மி கட்சி வாக்குகள், இரண்டு என்சிபி (சரத் பவார்) வாக்குகள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஒன்று அல்லது இரண்டு வாக்குகள் பற்றி சந்தேகம் உள்ளது. இவர்கள் செல்லாத வாக்குகளை பதிவு செய்தார்களா அல்லது கட்சி மாறி வாக்களித்தார்களா எனத் தெரியவில்லை. அதேபோல காங்கிரஸின் ஒரு வாக்கு மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இரண்டு வாக்குகள் மீதும் சந்தேகம் உள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக இண்டியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஏன் நன்றி தெரிவிக்கிறார்?. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் “மனசாட்சி வாக்குகளை” அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் கொண்டாடுகிறார்?. இது உண்மையிலேயே மனசாட்சியா அல்லது சிபிஐ/அமலாக்கத் துறை அழுத்தம் மற்றும் குதிரை பேரம் மூலம் மனசாட்சியாக நியாயப்படுத்தப்படுகிறதா?

    எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றதாக பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டபோது, ​​அது நாடாளுமன்றத்திற்குள் “வாக்கு திருட்டு” என்பதற்கான சான்றாக இல்லையா?.

    கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதி முதல் இப்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் வரை. மோடி- அமித்ஷா மாடல் வாக்கு திருட்டு மூலம் மட்டும்தான் வெற்றி பெறுகிறார்களா? மக்கள் ஆணையை மதிப்பதற்குப் பதிலாக வாக்குகளைத் திருடுவதாக அமைச்சர்கள் பெருமை பேசினால் ஜனநாயகம் நிலைக்குமா? அல்லது 2029 இல் பாஜகவின் வாக்குத் திருட்டு அரசியலுக்கு மக்கள் பதிலளிப்பார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

    இதுபற்றி திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை குழு தலைவர் டெரெக் ஓ’ பிரையன், “ஒரு சித்தாந்தப் போரில் எண்ணிக்கை முக்கியமில்லை. நான் உங்களுக்கு சில எண்களைத் தருகிறேன், மக்களவையில் துணை சபாநாயகர் இல்லாமல் 2,277 நாட்கள் ஆகிறது, மணிப்பூரில் வன்முறை தொடங்கி 861 நாட்கள் ஆகிறது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிகளை விதித்து 14 நாட்கள் ஆகிறது, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பாஜக தலைவராக 966 நாட்கள் நீடிக்கிறார், மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டு 1,281 நாட்கள் ஆகிறது, இறுதியாக, மக்களவையில் ஒரு கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து 4,116 நாட்கள் ஆகிறது. எனவே இந்த எண்கள் மிக முக்கியமானவை.” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    தேசியம்

    இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் இல்லை: முஸ்லிம்களுக்கு 3 முறை வாய்ப்பு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    • நீங்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் விஷயங்களைப் பயன்படுத்தி சரளைகளில் களைகளை அகற்ற 4 எளிய வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்க் ஸ்டார்லிங்க் திருப்புமுனையை அறிவிக்கிறது: 2 ஆண்டுகளில் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்க தொலைபேசிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் திருச்சி வீரர் ஹேம்சுதேசன்!
    • ‘எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி சொன்னது உண்மையே’ – டிடிவி தினகரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.