Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்
    மாநிலம்

    நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

    adminBy adminSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​நாமக்​கல் சிறுநீரக திருட்டு சம்​பவத்​தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

    சிவகங்கை மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒரு​வர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: என் சிறுநீரகங்​கள் பழு​தான​தால், மாற்று சிறுநீரகங்​கள் பொருத்த அனு​மதி கோரி பல மாதங்​களுக்கு முன்பு விண்​ணப்​பித்​தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான குழு இது​வரை அனு​மதி வழங்​க​வில்​லை.

    இதனால்என் உடல்​நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரு​கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்​சைக்கு விரை​வில் அனு​மதி வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. மனு​தா​ரரின் வழக்​கறிஞர் வாதிடும்​போது, “தமிழகத்​தில் கடந்த 2 மாதங்​களாக சிறுநீரக திருட்டு விவ​காரம் விஸ்​வரூபம் எடுத்து உள்​ளது.

    இதனால் மனு​தா​ரருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு ஒப்​புதல் வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. மனு​தா​ரரைப்​போல, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனு​மதி கோரிய வழக்​கில் 4 வாரங்​களில் அனு​மதி வழங்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    அதன்​படி மனு​தா​ரருக்கு விரை​வாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்க உத்​தர​விட வேண்​டும்” என்​றார். பின்​னர் நீதிப​தி, “மனு​தா​ரருக்கு 23 வயதாகிறது. அவரது 2 சிறுநீரகங்​களும் பழுதடைந்​துள்​ளன. இதனால் அவரது தாயாரிடம் இருந்து சிறுநீரகம் தான​மாகப் பெற்​றார். எதிர்​பா​ராத வகை​யில் அந்த சிறுநீரக​மும் பழு​தானது.

    தற்​போது மனு​தா​ரர் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் உயிருடன் வாழ்​கிறார். தற்​போது மனு​தா​ரரின் தோழி ஒரு​வர் சிறுநீரக தானம் வழங்க முன்​வந்​துள்ளார். எனவே, மனு​தா​ரரின் விண்​ணப்​பம் மற்​றும் ஆவணங்​களை 8 வாரங்​களில் பரிசீலித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் உள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்​கொள்ள அங்​கீ​காரம் வழங்​கும் குழு முடி​வெடுக்க வேண்​டும்” என உத்தர​விட்​டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சபரீசனின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    September 11, 2025
    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    மாநிலம்

    பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

    September 11, 2025
    மாநிலம்

    சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    September 11, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

    September 11, 2025
    மாநிலம்

    அம்ரித் பாரத் நிலையம் திட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை
    • கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘காதலன்’
    • சபரீசனின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
    • ஆரோக்கியத்திற்காக பேக்கிங் சோடா நீர்: தசை செயல்திறனை மேம்படுத்துதல், செரிமானத்தை ஆதரிக்கவும், அபாயங்களைப் புரிந்து கொள்ளவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.